தங்களின் வருகைக்கு நன்றி

date

relojes web 09 Apr 2025

20 March 2013

இலங்கை முஸ்லிம்கள் மீதான வன்முறைக்கு இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு கவலை

சவுதி அரேபியாவின் ஜெத்தா நகரை தளமாகக்
கொண்டு இயங்கும் இஸ்லாமிய
ஒத்துழைப்பு அமைப்பு, இலங்கையில்
முஸ்லிம்களுக்கு எதிராக
முன்னெடுக்கப்படும்
நடவடிக்கைகளுக்கு கவலை வெளியிட்டுள்ளது. இந்த அமைப்பு 57 நாடுகளில்
தமது உறுப்பினர்களை கொண்டு இயங்குகிறது.
இலங்கையில் இனங்கள் இடையே முறுகல்
ஏற்பட்டுள்ளதாகவும் அதனால்
இஸ்லாமியர்களுக்கும்
அவர்களது வர்த்தகத்திற்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதென இஸ்லாமிய
ஒத்துழைப்பு அமைப்பு இலங்கை அரசுக்கு
எழுதியுள்ள கடிதத்தில்
குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கையில் மத்திய மலைநாட்டில் முஸ்லிம்கள்
அதிகம் வசிக்கும் புவெலிக்கட பகுதியில் இனமுறுகல் பதற்றம் நிலவுவதாக
அக்கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கண்டியில் இருந்து 15 கிலோ மீட்டர் தூரத்தில்
உள்ள முஸ்லிம் நகரமான
புவெலிக்கடவுக்கு பஸ்ஸில் சென்ற இளைஞர்
குழு அங்குள்ள முஸ்லிம்களை அச்சுறுத்தி அவர்களது வர்த்தக
நிலையத்திற்கு சேதத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதனையடுத்து பொலிஸ் விசேட
அதிரடிப்படையினர்
அனுப்பப்பட்டு நிலைமை அமைதிக்கு
கொண்டுவரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.







Source:www.adaderana. lk/tamil/news.php?nid=36584

No comments:

Post a Comment