தங்களின் வருகைக்கு நன்றி

date

relojes web website clocks
Showing posts with label அறிவியல். Show all posts
Showing posts with label அறிவியல். Show all posts

07 April 2024

நாளை சூரிய கிரகணம்:இலங்கையில் பார்க்க முடியாது.

சூரிய குடும்பத்தில் முழு சூரிய கிரகணத்தைக் காணக்கூடிய ஒரே கிரகம் பூமி மட்டுமே.

ஒவ்வொரு 18 மாதங்களுக்கும், பூமியின் ஒரு பகுதியில் சூரிய கிரகணம் ஏற்படுகிறது. ஏப்ரல் 8 ஆம் தேதி சூரிய கிரகணத்தைக் காண உலகெங்கிலும் உள்ள மக்கள் ஆர்வமாக உள்ளனர். வட அமெரிக்காவின் சில பகுதிகளில் இந்த முழு சூரிய கிரகணத்தைக் காண முடியும். இந்த சூரிய கிரகணத்தின் போது, நான்கு நிமிடங்கள் மற்றும் ஒன்பது வினாடிகளுக்கு முழு இருள் இருக்கும்.

இந்த சூரிய கிரகணம் கனடா, அமெரிக்கா முதல் மெக்சிகோ வரை தெரியும்.

முந்தைய சூரிய கிரகணங்களை விட இந்த சூரிய கிரகணம் நீடிக்கும் நேரம் மிக அதிகமாக இருப்பதால், இந்த காலக்கட்டத்தில் பல சோதனைகளை நடத்த நாசா விஞ்ஞானிகள் திட்டமிட்டுள்ளனர்.

19 November 2018

400 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கிறதா மஹாமேரு புஷ்பம்?- சமூக வலைதளங்களில் படங்களுடன் வைரலாகும் வதந்தி


சதுரகிரி மலையில் மஹாமேரு புஷ்பம் என்ற ஒருவகை பூக்கள் 400 ஆண்டுகளுக்குப் பிறகு பூத்துள்ளதாக சமூக வலைதளங்களில் வைரலாக பகிரப்படும் புகைப்படங்கள் போலியானவை என்று தாவரவியல் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

08 May 2018

சுகப்பிரசவ குழந்தைகள் மட்டும்தான் நோய் எதிர்ப்பு தன்மையுடன் இருக்குமா?


ஜேம்ஸ் காலகெர்

பிபிசி அறிவியல் மற்றும் சுகாதார செய்தியாளர், ரேடியோ 4

அனைத்து சூழ்நிலைகளிலும் போராடும் சக்தியை மனிதனுக்கு வழங்கியிருக்கிறது இயற்கை. தாயின் கருவறையில் இருந்து வெளிவர முயற்சி செய்யும்போதே குழந்தையின் போர் குணம் தொடங்கிவிடுகிறது.

21 January 2017

ஈசலின் ஆயுள் ஒரு நாள்தானா?

ஈசல்

‘ஈசலின் ஆயுள் ஒரு நாள்தான்' என்பது கிராமத்தினரின் பரவலான நம்பிக்கை. ஈசலைப் பார்க்க வாய்ப்பில்லாத நகரத்து மக்களும் அதுதான் உண்மை என்று எண்ணிக் கொண்டிருக்கின்றனர்.
எறும்பு இனம்?

மழைக்காலம்தானே, ஈசல்களின் காலம். ஈசல்கள் பெருகும் இந்த நேரத்தில் மதுரை அமெரிக்கன் கல்லூரி விலங்கியல் துறை இணைப் பேராசிரியரும், தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மதுரை கிளைத் தலைவருமான ப.குமாரசாமி, ஈசலைப் பற்றிச் சொல்லும் அறிவியல் உண்மைகள், பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்துகின்றன.

“கறையான் குடும்பத்து உறுப்பினர்தான் ஈசல். கறையான் புற்றில் இருந்து ஈசல்கள் வெளிப்படுவதைப் பார்த்திருக்கலாம். ஆரம்பத்தில், ஈசலை (Winged white ants) இறக்கை உள்ள வெள்ளை எறும்பு என்று ஆங்கிலத்தில் வகைப்படுத்தினார்கள். ஆனால், கறையான் எறும்பு இனத்தைச் சேர்ந்தது அல்ல. ஆறு கால்களைக் கொண்ட பூச்சியினத்தைச் சேர்ந்தவை என்று கண்டறியப்பட்டது.

06 January 2017

விரல்ரேகை ஓர் அற்புதம்


கட்டாயம் பாருங்கள் செயார்செய்யுங்கள்


“மரித்து (உக்கிப்போன) மனிதனின் எழும்புகளைநாம் ஒன்று சேர்க்கவே மாட்டோம் என்று மனிதன் எண்ணுகின்றானா? அல்ல, அவன் நுனி விரல்களையும் (முன்னிருந்தவாறே) செவ்வையாக்க நாம் ஆற்றலுடையோம்” (அல்குர்ஆன்: 75:3-4)



06 March 2016

ஒளிபுகும் வடிவிலான தோற்றத்தை கொண்ட ஆக்டோபஸ் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.(வீடியோ இணைப்பு)



ஒளிபுகும் வடிவிலான தோற்றத்தை கொண்ட ஆக்டோபஸ் ஒன்று ஹவாயில் கடலின் அடியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த உயிரினம் கிட்டத்தட்ட ஒரு புதிய வகையைச் சேர்ந்ததாக இருக்கக்கூடும் என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
நேக்கர் தீவிலிருந்து கிட்டத்தட்ட 2.5 மைல்கள் தொலைவில் வைத்து, நீரின் அடியில் பயணிக்கும் நீர்மூழ்கி வாகனம் ஒன்று இதனை கண்டுபிடித்துள்ளது.
கரங்கள் இல்லாத ஆக்டோபஸ் கடலின் ஆழத்தில் உள்ளது மிகவும் அரிது என என்.ஓ.ஏ.ஏ எனப்படும் தேசிய கடல் மற்றும் வளிமண்டலவியல் நிறுவனத்தின் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த உயிரினத்திற்கு கேலிச்சித்திரத்தில் வரும் ஆவியின் பெயரான `கஸ்பர்' என்ற பெயரிடப்பட்டுள்ளது.

05 March 2016

`புற்றுநோய்க்கு புதிய சிகிச்சை முறை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது'



மனித உடலில் `நோயெதிர்ப்புக் கட்டமைப்பை ஒழுங்குபடுத்தி' புற்றுநோயை அழிக்கும் முறைமை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக, பிரிட்டனில் உள்ள ஆய்வாளர்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.
புற்றுநோய் உள்ள செல்களுக்கு உள்ளே, இயல்பாகவே இருக்கும் பலவீனம் ஒன்றை தாம் கண்டறிந்துள்ளதாக யுனிவர்சிட்டி காலேஜ் ஆஃப் லண்டனைச் (யு.சி.எல்) சேர்ந்த விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
உடலில் உள்ள சிறப்பான நோய்த்தடுப்பு செல்களான T- செல்கள், புற்றுநோய் கட்டிகளை கண்டறிந்து அழிக்க வழி ஏற்படுத்துவதாக இந்த கண்டுபிடிப்பு உள்ளது.
இதன் மூலம் நோய் முற்றிய நிலையில்கூட, அதற்கு தனிப்பட்ட வகையில் சிகிச்சை வழங்க முடியும் என்றும், ஆய்வாளர்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.
பணச் செலவுமிக்க இந்த சிகிச்சை முறைமை, இன்னமும் மனிதர்களிடத்தில் பரிசோதிக்கப்படவில்லை எனவும், இரண்டு ஆண்டுகளினுள் அது மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்துள்ளனர்.
இதன் மூலம் நோயைக் குணப்படுத்துவது சாத்தியமே எனத் தெரிவிக்கும் துறைசார் வல்லுனர்கள், ஆனாலும் இது ஒரு சிக்கலான முறை என தெரிவித்துள்ளனர்.
புற்றுநோய்க்கான இந்த புதிய கண்டுபிடிப்பினை அடிப்படையாகக் கொண்டு, எதிர்காலத்தில் இந்த நோய்க்கான சிகிச்சை முறைகள் பல கண்டுபிடிக்கப்படலாம் என்ற நம்பிக்கையினை ஆய்வாளர்கள் வெளியிட்டுள்ளனர்.
இந்த ஆய்விற்கு ஆதரவு வழங்கிய கான்சர் ரிசர்ச் யு.கே நிறுவனம், இந்தக் கண்டுபிடிப்பை வரவேற்றுள்ளது.
நன்றி:BBC

18 February 2016

கூகுள் 'லூன் பலூன் விழவில்லை, தரையிறங்கியது'


இலங்கையில் அதிவேக இணைய வசதியை வழங்கும் பொருட்டு கூகுள் நிறுவனத்தினால் வான் பரப்பில் பறக்கவிடப்பட்டிருந்த பெரிய பலூன் ஒன்று உடைந்து விழுந்துள்ளதாக வெளியான தகவலில் எந்த உண்மையும் இல்லை என்று தொலைத் தொடர்பு மற்றும் டிஜிட்டல் உட் கட்டமைப்பு அமைச்சர் ஹரீன் பெர்ணான்டோ கூறுகின்றார்.
அந்த பலூன் திட்டமிட்டபடி உரிய இடத்தில் தரையிறக்கப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.
தரையிறக்கப்பட்ட இந்த பலூனில் பொருத்தப்பட்டிருந்த இயந்திரங்கள் நல்ல நிலையில் செயற்பட்டுக்கொண்டிருந்ததாகவும், அதில் மீளவும் ஹீலியம் வாயுவை நிரப்பி இரத்மலானையிலிருந்து பறக்கவிடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
இலங்கை உள்ளிட்ட பல நாடுகளுக்கு அதிகவேக இணைய வசதியை வழங்குவதற்காக கூகுள் நிறுவனத்தினால் “லூன்” என்ற பலூன் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.
இந்தத் திட்டத்தின் முதலாவது பரீட்சார்த்த நாடாக இலங்கையை தெரிவு செய்த கூகுள் நிறுவனம், அரசாங்கத்தின் அனுமதியுடன் லூன் திட்டத்தின் கீழ் குறித்த பலூனை பறக்கவிட்டது.
வானில் உலாவரும் இந்த பலூன் மூலம் அதிவேக இணைய வசதியை கிராமிய மற்றும் பின்தங்கிய பகுதிகளுக்கு வழங்குவது கூகுளின் திட்டமாக உள்ளது.


                  
"project loon" என அழைக்கப்படும் அதிவேக இண்டர்நெட் சேவை வழங்கும் கூகிள் பலூன் அதன் முதல் சோதனையை இலங்கையில் ஆரம்பிக்கப் பட்டன.
இப்பரிசோதனையில் பயன்படுத்தப்பட இருக்கும் மூன்று பலூன்களில் ஒன்று இலங்கையின் தெற்குப் பகுதியினூடாக நேற்று முந்தினம் காலை  இலங்கை வான்வெளியில் பிரவேசித்தது  அனைவரும் அறிந்ததே.

11 November 2015

கடலில் விழவுள்ள மர்மப்பொருள்: வெடிப்புச் சிதறல்களை தொட வேண்டாமென எச்சரிக்கை!


வெள்ளியன்று முற்பகலில் தென்பகுதி கடலில் விழலாமென எதிர்பார்க்கப்படும் மர்மப் பொருள் இடைவழியில் வெடித்து சிதறினால் நிலப் பகுதியில் விழும் அதன் பாகங்களை எவரும் தொட வேண்டாம் என்று கொழும்பு பல்கலைக்கழகத்தின் பெளதீகவியல் பீட பேராசிரியரும் வான சாஸ்திர விஞ்ஞானியுமான சந்தன ஜயரட்ன நேற்று  தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில்:-

இலங்கையின் தென்பகுதியிலுள்ள தேவேந்திரமுனையிலிருந்து 65 கிலோ மீற்றர் தூரத்தில் கடலில் மர்மப் பொருளொன்று நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை முற்பகல் 11.50 மணிக்கு விழவிருக்கின்றது.

இப்பொருளுக்கு WT1190F எனப் பெயரிடப்பட்டுள்ளது. சந்திரன் தற்பொது இருக்கும் இடத்திலிருந்து இரு மடங்குகளுக்கு அப்பாலான தூரத்திலிருந்தே இப்பொருள் பூமியை நோக்கி வருகின்றது. இந்தப் பொருள் இரண்டு மீற்றர்கள் நீளமானதாக (07 அடிகள்) காணப்படுகின்றது. குழாய் வடிவில் துளை

கொண்டதாகக் காணப்படும் இப்பொருள் ஏற்கனவே சந்திரனுக்கு ஏவப்பட்ட ரொக்கட்டின் பாகமாக இருக்கலாம் என்று நம்பப்படுகின்றது.

இப்பொருள் மேற்கிலிருந்து கிழக்கு நோக்கியே வந்து

கொண்டிருக்கின்றது. என்றாலும் இன்னும் வளி மண்டலப் பகுதிக்குள் உட்பிரவேசிக்கவில்லை. அவ்வாறு பிரவேசிக்கும் போது வெப்ப நிலை அதிகரித்து ஒரு பகுதி தீப்பற்றி எரிந்து விட முடியும். அப்பொருள் ரொக்கட்டின் என்ஜின் பாகம் என்றால் வளிமண்டலத்தில் சுமார் நூறு கிலோ மீற்றர்கள் செல்லும் போது வெப்ப நிலை அதிகரித்து வெடித்து சிதற முடியும். அவ்வாறு வெடித்துச் சிதறும் போது அதன் பாகங்கள் நிலப் பகுதியிலும் விழலாம்.

இதன் பாகங்கள் நிலப்பகுதியில் விழுந்தால் அவற்றை எவரும் தம் கைகளால் பிடிக்க வேண்டாம். ஏனெனில் அப்பாகங்களில் கதிர் தாக்கங்கள் காணப்படலாம். அதனால் அப்பாகங்கள் விழுந்திருக்கும் இடம் தொடர்பான தகவலை உடனடியாக எமக்கு அறியத் தாருங்கள். அவை தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்ளவென நாம் குழுவொன்றை அமைத்துள்ளோம். இப்பொருள் வளிமண்டலத்தினுள் பிரவேசித்த பின் தீபந்து போன்று கூட காட்சியளிக்கலாம்.

இப்பாகம் விழுவது குறித்து எவரும் அச்சம் கொள்ளத் தேவையில்லை. ஏனெனில் இவ்வாறான பொருட்கள் உலகின் பல பிரதேசங்களில் ஏற்கனவே விழுந்துள்ளன. அதே நேரம் இப்பொருள் கடலில் விழுவதால் சுனாமி பேரலை ஏற்படும் என்றும் அஞ்சத் தேவையில்லை.

என்றாலும், இப்பொருள் முற்பகல் 11.50 மணிக்கு விழவிருப்பதால் அதற்கு முன்னரான ஒரு மணித்தியாலம் முதல் பின்னரான ஒரு மணித்தியாலம் வரையும் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாமென கேட்டுக் கொள்ளுகின்றோம். அதே நேரம் இப்பொருள் எமக்கு அருகிலுள்ள சர்வதேச கப்பல் போக்குவரத்து பாதை பகுதியிலேயே விழவிருக்கின்றது.

அதனால் இக்காலப்பகுதியில் இப்பகுதியின் ஊடாக கப்பல் போக்குவரத்தை தவிர்த்துக் கொள்ளுமாறும் அறிவூட்டுவதற்குத் திட்டமிட்டுள்ளோம். அத்தோடு விமானங்களையும், ஹெலிக்கொப்டர்களையும் இக்காலப் பகுதியில் இப்பகுதியில் பயணிக்க வேண்டாம் எனவும் ஆலோசனை வழங்கியுள்ளோம் என்றும் அவர் குறிப்பிட்டார்.


நன்றி:தினகரன்

09 November 2015

மர்மப்பொருள் விழும் அபாயம்! வெள்ளிக்கிழமை தென்பகுதிக் கடலில், மீன்பிடிக்கவும், விமானங்கள் பறக்கவும் தடை விதிக்கப்படலாம்?

 விண்வெளியில் இருந்து WT 1190F எனப் பெயரிடப்பட்டுள்ள மர்மப்பொருள், வரும் 13ம் நாள், வெள்ளிக்கிழமை விழும் என்று எதிர்பார்க்கப்படும், இலங்கையின் தென்பகுதிக் கடலில், மீன்பிடிக்கவும், விமானங்கள் பறக்கவும் தடை விதிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
விண்கலம் ஒன்றின் பாகமாக இருக்கலாம் என்று கருதப்படும், 2 மீற்றர் நீளமான – WT 1190F எனப் பெயரிடப்பட்டுள்ள மர்மப்பொருள், வரும் 13ம் நாள் இலங்கைக்குத் தெற்கில், 100 கி.மீ தொலைவில், கடலில் விழும் என்று விண்வெளி ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
வரும் 13ம் நாள் வெள்ளிக்கிழமை, உள்ளூர் நேரப்படி, காலை 11.48 மணியளவில், கடலில் விழும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த மர்மப் பொருளினால் இலங்கைக்கு ஆபத்து ஏற்படாது என்றும், அது வளிமண்டலத்துக்குள் நுழையும் போது பெரும்பாலும் நடுவானிலேயே எரிந்து போய் விடும் சாத்தியம் உள்ளதாக கொழும்பு பல்கலைக்கழக பௌதிகவியல் துறைத் தலைவர் கலாநிதி சந்தன ஜெயரத்ன தெரிவித்துள்ளார்.
அதேவேளை, சிறிய துண்டுகள் நிலத்தில் விழுவதற்கான சாத்தியங்களை நிராகரிக்க முடியாது என்று ஆர்தர் சி கிளார்க் நிலையத்தின், மூத்த ஆய்வாளரான விஞ்ஞானி சரோஜ் குணசேகர குறிப்பிட்டுள்ளார்.
எல்லாப் பகுதிகளும் எரிந்து போகத் தவறினால், சிறிய துண்டுகள் நிலத்தை வந்தடைய வாய்ப்புகள் உள்ளன என்றும் அவர் கூறியுள்ளார்.
இந்த நிலையில், ஆர்தர் சி கிளார்க் நிலையம் மற்றும், அனர்த்த முகாமைத்துவ நிலையம் ஆகியவற்றின் தகவல்களின் அடிப்படையில், வரும் வெள்ளிக்கிழமை தெற்கு கடல் பகுதியில் விமான பறப்புக்குத் தடைவிதிப்பது குறித்து அவதானித்து வருவதாக, விமான சேவைகள் கட்டுப்பாட்டாளர் கிரிசாந்தி திசேரா தெரிவித்துள்ளார்.
அதேவேளை, மாத்தறை, காலி, அம்பாந்தோட்டை மாவட்ட கடற்றொழில் திணைக்கள அதிகாரிகளை, அந்தப் பகுதிகளில் மீன்பிடித் தடையை நடைமுறைப்படுத்தும் படி அறிவுறுத்தியுள்ளதாக, கடற்றொழில் திணைக்கள பணிப்பாளர் பெர்னான்டோ கூறியுள்ளார்.
தகவல்:இனையம்
பட உதவி:spaceflight 101.com

16 September 2015

பாம்புக் கடியும் விஷ முறிவு மருந்தும்: ஒரு புரிதல்


உலகளவில் ஒவ்வொரு ஆண்டும் ஒரு லட்சம் பேர் வரை பாம்புக் கடியால் உயிரிழக்கின்றனர்.
பாம்பின் நஞ்சு மிகவும் கடுமையானதாக இருக்கும் நிலையில், விஷமுறிவு மருந்துகளின் தயாரிப்பும் குறைந்துவருவதாக வல்லுநர்கள் கூறுகிறார்கள்.
ஆண்டொன்று ஐம்பது லட்சம் பேர் பாம்புக் கடிக்கு இலக்காகின்றனர், அதில் ஒரு லட்சம் பேர் உயிரிழப்பதோடு, நான்கு லட்சம் பேர் முடமாக்கப்பட்டோ அல்லது உருக்குலைந்தோ போகிறார்கள் என்று கணக்கிடப்பட்டுள்ளது.
பாம்பு விஷத்தில் என்னவுள்ளது?
பாம்பு விஷமானது பல நூறு புரதங்களால் ஆனது. அவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையில் மனித உடலின் மீது தாக்கத்தை ஏற்படுத்தும்.
ஒரே வகையைச் சேர்ந்த பாம்புகளில்கூட ஒவ்வொரு பாம்பின் விஷத்தின் வீரியமும் மாறுபடும்.
விஷத்தை வெளியிடும் மற்ற எந்த விலங்கினத்தைக் காட்டிலும் பாம்புகளே மனிதர்களுக்கு மிகவும் அருகில் சென்று தாக்கி கூடுதலான உயிரிழப்புகளை ஏற்படுத்துவதும் ஆய்வுகளில் தெரிய வந்துள்ளன.
உடலை எப்படி தாக்கும்?
பாம்பு மனிதர்களை கடித்து விஷத்தைச் செலுத்தியவுடன் அது இரண்டு வகைகளில் மனிதர்களின் உடலைத் தாக்கும்.
ஒன்று, ரத்த ஓட்டத்தை தாக்கி கடும் விளைவுகளை ஏற்படுத்தும் அல்லது நரம்பு மண்டலத்தை முடக்கும். இவை இரண்டு மரணம் வரை இட்டுச் செல்லக் கூடும்.
ரத்தத்தில் பாம்பின் விஷம் கலக்கும்போது அவை சிற்சிறு அளவில் ரத்தம் கட்டிப்போகச் செய்து, ரத்தக் குழாய்களில் துளைகளை ஏற்படுத்தி அதன் மூலம் ரத்தக்கசிவை ஏற்படுத்தி மரணம் ஏற்படலாம்.
சிலவகை நஞ்சுகள் நரம்பு மண்டலத்தை விரைவாகத் தாக்கி உடலில் மற்ற பகுதிகளுக்கு நரம்புகள் மூலம் கொண்டுசெல்லப்படும் சமிஞ்கைகளை பாதித்து உடலை முடங்கிப் போகச் செய்யலாம். மரணமும் ஏற்படக் கூடும்.
விஷமுறிவு மருந்து
பாம்பு கடித்தவுடன் எவ்வளவு விரைவாக விஷமுறிவு மருந்து கொடுக்கப்படுகிறதோ அந்த அளவுக்கு நல்லது என மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
விஷ முறிவு மருந்து என்பது பாம்பின் நஞ்சிலிருந்தே தயாரிக்கப்படுகிறது.
பாம்பிலிருந்து எடுக்கப்பட்ட நஞ்சானது நீர்த்துப்போகச் செய்யப்பட்டு பின்னர் குதிரைகள் அல்லது செம்மறி ஆடுகளில் செலுத்தப்பட்டு, அதன் உடலில் உருவாகும் நோய் எதிர்ப்புச் சக்திகளைப் பிரித்தெடுத்து, அதிலிருந்து விஷ முறிவு மருந்து தயாரிக்கப்படுகிறது.
ஆனால் உலகளவில் மிகக் குறந்த அளவுக்கே விஷ முறிவு மருந்துகள் தயாரிக்கப்படுவதும் அவற்றில் விலை மிகவும் அதிகமாக உள்ளதும் பாம்புக் கடி பட்டவர்களை காப்பாற்றுவதில் பின்னடைவை ஏற்படுத்துகின்றன என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
source:BBC

25 July 2015

நபி வாழ்ந்த காலகட்டத்தைச் சேர்ந்த மிகப்பழைமையான புனித அல் குர்ஆனின் கையெழுத்துப் பிரதி கண்டுபிடிப்பு(VIDEO))



இஸ்லாமியர்களின் புனித மறையான அல்-குர்ஆனின் ஆகப் பழைய எழுத்துப் பிரதியின் சில பக்கங்கள் தமது ஆவணத் தொகுப்பில் இருந்தது தெரியவந்திருப்பதாக பிரிட்டனின் பெர்மிங்ஹாம் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

இந்த எழுத்துப் பிரதியை கார்பன் டேட்டின் முறையில் பரிசோதித்தபோது அவை ஏழாம் நூற்றாண்டைச் சேர்ந்தவை எனத் தெரியவருகிறது.

இந்தப் பிரதியை எழுதியவர் இறைதூதர் முகம்மத் நபியைக் கண்டும் கேட்டும் இருந்த ஒருவராக இருந்திருப்பார் என பர்மிங்ஹாம் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

இராக்கில் பிறந்த சரித்திர ஆர்வலரான அல்ஃபோன்ஸ் மிங்கானா என்பவரால் 1920கள் காலகட்டத்தில் இந்த குரான் எழுத்துப் பிரதியின் பக்கங்கள் பர்மிங்ஹாமுக்கு கொண்டுவரப்பட்டிருந்தன.

08 November 2014

3டி படங்களால் குழந்தைகளின் கண்திறனில் பாதிப்பு: விஞ்ஞானிகள் எச்சரிக்கை

ஆறு வயதிற்கும் குறைவான பிள்ளைகள் முப்பரிமாண 3டி படங்களை பார்க்க
அனுமதிக்கக்கூடாது என பிரான்சின் மக்கள் ஆரோக்கிய கண்காணிப்பு அமைப்பான
அன்செஸ் பரிந்துரைத்துள்ளது.
வளர்ந்து வருகின்ற குழந்தைகளின் கண்களில் முப்பரிமாணப் படங்கள்
ஏற்படுத்தக்கூடிய தாக்கம் பற்றி ஆராய்ந்த பின்னர் அன்செஸ் இந்தப்
பரிந்துரையைச் செய்துள்ளது.
ஒரு முப்பரிமாண படத்தில் இரண்டு வெவ்வேறு இடங்களை நம் கண்கள் ஒரே
நேரத்தில் பார்க்க வேண்டும். அதன் பின்னர்தான் நமது மூளை அதனை ஒரே படமாக
புரிந்துகொள்ளும். இவ்வாறாகத்தான் முப்பரிமாண படங்களை நாம்
கிரகித்துக்கொள்கிறோம்.
ஆறு வயதுக்கு குறைவான குழந்தைகளின் கண்கள் முழுமையான வளர்ச்சி
அடைந்திருக்காத சூழ்நிலையில், முப்பரிமாணப் படங்களைப் பார்க்கும்போது
அவர்களுக்கு அப்படங்களை கிரகித்துக்கொள்ள அதிக சிரமமாக இருக்கும். அதனால்
அவர்களின் ஆரோக்கியத்தில் ஏற்படும் தாக்கம் பெரியவர்களைக் காட்டிலும்
அதிகமாக இருக்கிறது என என அன்செஸ் வாதிடுகிறது.
13 வயது வரும் வரைக்கும் பிள்ளைகள் முப்பரிமாண படங்களை குறைவாகவே பார்க்க
அனுமதிக்கப்பட வேண்டும் என உணவு, சுற்றுச்சூழல், வேலையிட ஆரோக்கியம்
மற்றும் பாதுகாப்புக்கான இந்த பிரஞ்சு அமைப்பு தெரிவித்துள்ளது.
சிறார்களுக்கான படங்கள் அதிக அளவில் முப்பரிமாண தொழில்நுட்பத்தில்
வெளிவருகின்ற ஒரு காலகட்டம் இது. வீடியோ கேம்கள், தொலைக்காட்சிகள்,
கணினித் திரைகள் என்று எல்லாவற்றிலும் முப்பரிமாணத் திரை வந்துவிட்டது.
தற்போது கூடுதலான நிறுவனங்கள் முப்பரிமாணப் படங்களுக்கான கருவிகளை
உருவாக்கி வருகின்றன.
ஆப்பிள் நிறுவனம் கண்ணாடி அணியாமலேயே முப்பரிமாணப் படங்களைப் பார்க்க
உதவுகிற திரை ஒன்றை உருவாக்கி வருவதாக உறுதிசெய்யப்படாத தகவல்கள்
கூறுகின்றன.
முப்பரிமாணப் படங்கள் கண்களுக்கு ஏற்படுத்தக்கூடிய பாதிப்பு பற்றி
குரல்கள் ஒலிப்பது இது முதல் முறை என்றில்லை.
ஏற்கனவே இத்தாலியில் இளம் பிள்ளைகள் முப்பரிமாணப் படங்களைப்
பார்ப்பதற்குரிய கண்ணாடிகளை அணிவதில் கட்டுப்பாடுகள் உள்ளன. அந்த
நாட்டின் சுகாதார கண்காணிப்பு நிறுவனம் எச்சரித்ததை அடுத்து இந்த
கட்டுப்பாடு கொண்டுவரப்பட்டது.
நிண்டெண்டோ என்ற வீடியோ கேம் நிறுவனம் 2010ல் ஒரு புதிய முப்பரிமான
கருவியை அறிமுகப்படுத்தியபோது, ஆறு வயதுக்கும் குறைவானப் பிள்ளைகள்
அவற்றைப் பயன்படுத்தினால் அவர்களின் பார்வைத்திறன் பாதிக்கப்படலாம் என
எச்சரித்திருந்தது.
அதேநேரம் முப்பரிமாணப் படங்களைப் பார்த்ததன் விளைவாக பார்வைத் திறன்
கெட்டுப்போனதாக தங்களிடம் புகார்கள் வந்ததில்லை என அமெரிக்க கண்திறன்
சங்கம் கூறியுள்ளது.

Source:BBC

01 November 2014

கருவில் இருக்கும் சிசுவுக்கு “இதய அறுவை சிகிச்சை” – ஹைதராபாத் மருத்துவர்கள் சாதனை (video)

ஹைதராபாத்: இந்தியாவில் முதல்முறையாக கருவில் இருக்கும் சிசுவிற்கு இதய அறுவை சிகிச்சை செய்து மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர்.
ஹைதராபாத்தில் உள்ள கேர் மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்டது இந்த புதிய முறை அறுவை சிகிச்சை.
இந்த அறுவைச் சிகிச்சை மூலம், சிரிஷா எனும் 25 வயது பெண்ணின் கருவில் இருந்த சிசுவின் இதய ரத்தகுழாய் அடைப்பு வெற்றிகரமாக குறைக்கப்பட்டுள்ளது.
இடது பக்க ரத்தக் குழாய் பாதிப்பு:
சிசுவிற்கு அறுவை சிகிச்சையை மேற்கொண்ட மருத்துவர் நாகேஸ்வர ராவ் இது குறித்து தெரிவிக்கையில், "25 வார சிசுவின் இதயத்தின் இடது பக்க ரத்தக்குழாயில் பாதிப்பு ஏற்பட்டிருந்தது.
பிறக்கும் குழந்தைக்கு ஆபத்து:
அந்த ரத்தகுழாய் சுருங்க ஆரம்பித்திருந்ததால் குழந்தை பிறக்கும்போது இதயத்தின் இடது பக்கம் மிகவும் சிறியதாக இருந்திருக்கும்.
வால்வோட்டமி அறுவை சிகிச்சை:
அதனால், சிசுவிற்கு "ஃபோட்டல் ஆர்டல் வால்வோட்டமி" என்னும் அறுவை சிகிச்சையை மேற்கொள்ள முடிவு செய்தோம்' எனத் தெரிவித்துள்ளார்.
12 மருத்துவ நிபுணர்கள்:
இந்தியாவில் முதல் முறையாக நடத்தப்பட்ட இந்த அறுவை சிகிச்சையை 12 மருத்துவ நிபுணர்கள் செய்துள்ளனர்.
பலூன் மூலமாக சிகிச்சை:
சிசுவின் 27 வது வாரத்தில் தாய்க்கும், சிசுவிற்கும் மயக்க மருந்து கொடுக்கப்பட்டு, இறக்குமதி செய்யப்பட்ட ஊசியின் உதவியோடு பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட பலூன் மற்றும் கம்பியை பயன்படுத்தி சிசுவின் இதயத்தில் இருந்த ரத்த குழாய் அடைப்பு சரி செய்யப்பட்டது.
60 சதவீதம் குறைப்பு:
இந்த அறுவை சிகிச்சைக்கு பிறகு தாயின் கருப்பைக்குள் இருந்த சிசுவின் இதயத்தில் இருந்த 99 சதவீத அடைப்பு 60 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.
அறிவியல் ஆசிரியை:
சிரிஷா அறிவியல் ஆசிரியர் என்பதால், அவருக்கும் அவரது குழந்தைக்கும் என்ன நடக்கிறது என்பதை அவரால் புரிந்துகொள்ள முடிந்தது எனவும் அவர் கூறினார்.
இதயதுடிப்பு அதிகரிப்பு:
அறுவை சிகிச்சைக்குப்பின் சிசுவின் உடல்நிலை நலமாக இருப்பதாகவும், சிசுவின் எடை 830 கிராமிலிருந்து 1200 கிராமாக அதிகரித்துள்ளதாகவும், ரத்த கசிவின்றி இதய துடிப்பு அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

26 January 2014

'பூமிக்கு வெளியிலும் உயிர்கள்': இலங்கை விண்கற்களின் செய்தி

'அரலகங்விலவில் விழுந்த விண்கல்'


இலங்கையில் 2012-ம் ஆண்டின் இறுதியிலும் 2013-ம் ஆண்டின் முற்பகுதியிலும்
விண்கற்கள் விழுந்த இடத்தை வரலாற்றுச் சிறப்பு மிக்க இடமாக
பாதுகாக்குமாறு விஞ்ஞானிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இலங்கையைப் பிறப்பிடமாகக் கொண்ட பிரிட்டிஷ் விஞ்ஞானியான சந்திரா
விக்ரமசிங்க, ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவை சந்தித்து இதற்கான கோரிக்கையை
முன்வைத்துள்ளார்.
அதன்படி, பொலநறுவையை அண்டிய அரலகங்வில பிரதேசம் வரலாற்று முக்கியத்துவம்
மிக்க இடமாக பாதுகாக்கப்பட உடனடி நடவடிக்கைகளை ஜனாதிபதி எடுத்துள்ளதாக
பிபிசி தமிழோசையிடம் பேசிய விஞ்ஞானி சந்திரா விக்ரமசிங்க தெரிவித்தார்.
'முன்னெப்போதும் இல்லாத வகையில் இலங்கையில் கிடைத்த விண்கற்கள், பூமியை
கடந்தும் உயிர்கள் வாழக்கூடும் என்பதற்கு நிரூபணம்' என்று சந்திரா
விக்ரமசிங்க கூறினார்.
அரலகங்வில என்ற கிராமத்தில் விவசாயிகள் கண்டெடுத்திருந்த கற்களை நாங்கள்
ஆய்வுக்குட்படுத்தி இருந்தோம். ஆனால் ஆரம்பத்தில் அவை வழமையான
விண்கற்களுக்குரிய அடிப்படை தகைமைகளைக் கொண்டிருக்கவில்லை என்று
கருதப்பட்டதால் பேராதனை பல்கலைக்கழக ஆய்வாளர்கள் மட்டுமன்றி எங்களாலும்
அவை விண்கற்கள் தான் என்பதை ஏற்றுக்கொள்வதில் பிரச்சனைகள் இருந்தன'
என்றார் விக்ரமசிங்க.
'அவை ஏற்கனவே கிடைத்திருக்கின்ற விண்கற்களைவிட முற்றிலும் வேறுபட்டு
இருந்தமையால் தான் இந்த சந்தேகம் வந்திருந்தது. ஆனால் அமெரிக்காவிலும்
ஜப்பானிலும் நடத்தப்பட்ட உயர் ரக இரசாயன ஆய்வுகளின் முடிவில் இவை
உண்மையில் விண்கற்கள் தான் என்பது உறுதியாகிவிட்டது' என்றும் அவர்
தமிழோசையிடம் கூறினார்.

அரலகங்வில- 'வரலாற்றுத் திருப்புமுனைக்குரிய இடம்

இலங்கையில் கிடைத்த இந்த விண்கற்கள் முன்னெப்போதும் வழங்காத, இன்னொரு
புதிய வரலாற்று திருப்புமுனையான தகவலையும் தந்திருப்பதாக பேராசிரியர்
சந்திரா விக்ரமசிங்க தெரிவித்தார்.
'இந்த விண்கற்களில் நுண்ணுயிர் படிமங்கள் இருப்பது வாதப்பிரதிவாதங்கள்
இன்றி உறுதியாகியிருந்தது. வானிலிருந்து விழுந்த இந்த விண்கற்களில்
இவ்வாறான உயிர்படிமங்கள் இருப்பது கண்டறியப்பட்டதன் மூலம் உயிர் என்பது
பூமியையும் தாண்டிய பேரண்ட பண்புகளைக் கொண்டது என்பது
நிரூபணமாகியிருக்கிறது' என்றார் அவர்.
உயிர் என்பது பூமிக்குள் மட்டும் அகப்பட்ட ஒரு விடயமல்ல என்பதுதான் இந்த
விண்கற்கள் மூலம் கிடைத்துள்ள முடிவு என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
பேராசிரியர் அவர்களே, இந்தக் கற்கள் பூமியில் வந்து விழுந்தபின்னர் தான்
ஆய்வுக்குட்படுத்தப்பட்டன. பூமியில் வந்துசேர்ந்த பின்னர் கூட அவற்றில்
இந்த மாற்றங்கள் நடந்திருக்கலாம் அல்லவா? என்று தமிழோசை வினவியது.
பாதுகாக்கப்படும் பிரதேசத்தில் தொடர்ந்தும் ஆய்வுகள் நடத்தப்படவுள்ளன
'இந்தக் கற்கள் பூமியில் நீண்டகாலத்திற்கு இருந்திருந்தால் நீங்கள்
சொல்வது சரியாகப்படலாம். ஆனால் அதற்கு நீண்டகாலம் எடுக்கும். ஆனால்,
இங்கு நாங்கள் ஆராய்ச்சி நடத்திய கற்கள் விழுந்து சில மணிநேரங்களில்
கண்டெடுக்கப்பட்டவை. அவை வானிலிருந்து விழுந்தவை தான் என்பதிலும்
சந்தேகம் ஏதுமில்லை. அதில் நுண்ணுயிர் படிமங்கள் இருந்தன என்பதிலும்
சந்தேகமில்லை' என்றார் பிரிட்டனின் பாக்கிங்ஹாம் பல்கலைக்கழகத்தின் விண்
உயிரியல் ஆய்வு நிறுவனத்தின் இயக்குநரும் முன்னணி விஞ்ஞானியுமான
பேராசிரியர் சந்திரா விக்ரமசிங்க.
உயிர் என்பது பூமிக்குள் மட்டும் அகப்பட்டது என்கின்ற கோட்பாடுகளுக்கு
மாறான வாதத்துக்கு இலங்கையில் கிடைத்த விண்கற்கள் ஆதாரமாக அமைவதாகவும்
பேராசிரியர் விக்ரமசிங்க சுட்டிக்காட்டுகிறார்.
இதனாலேயே, குறித்த விண்கற்கள் கிடைத்த அரலகங்வில பிரதேசத்தை
பாதுகாக்கப்பட்ட பிரதேசமாக அறிக்கும்படி ஜனாதிபதியிடம் கோரியுள்ளதாக
அவர் தெரிவித்தார்.
மீட்ரோய்ட்எனப்படும் விண்கற்கள்,கொமெட்எனப்படும் வால் வெள்ளிகள் அல்லது
எரிநட்சத்திரங்களின் சிதைவுகள். அதாவது வால்வெள்ளிகள் சூரியனுக்கு
அருகில் வரும்போது அவை எரிந்து விழும் சிதைவுகளே விண்கற்கள் என்பது
குறிப்பிடத்தக்கது.

Source:bbctamil

02 June 2013

தேனீக்களின் வழி அறியும் திறன்

68, 69. "மலைகளிலும், மரங்களிலும், மனிதர்கள் கட்டுபவற்றிலும் கூடுகளை நீ
அமைத்துக் கொள்! பின்னர் ஒவ்வொரு கனிகளிலிருந்தும் சாப்பிடு! உனது
இறைவனின் பாதைகளில் எளிதாகச் செல்!''474 என்று உமது இறைவன் தேனீக்களுக்கு
அறிவித்தான். அதன் வயிறுகளிலிருந்து மாறுபட்ட நிறங்களையுடைய பானம்
வெளிப்படுகிறது.259 அதில் மனிதர்களுக்கு நோய் நிவாரணம் உள்ளது.
சிந்திக்கின்ற சமுதாயத்திற்கு இதில் தக்க சான்று உள்ளது.26 474
தேனீக்களின் வழி அறியும் திறன் இவ்வசனத்தில் (16:68) தேனீக்களை நோக்கி
உனது இறைவனின் பாதைகளில்
எளிதாகச் செல் என்று தேனீக்களுக்கு உள்ளுணர்வை ஏற்படுத்தியதாகக்
கூறப்படுகிறது. தேனீக்கள் பாதைகளை அறிவதில் தனித்து விளங்குகின்றன என்பதை
இன்றைய விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். இதுகுறித்து பிரிட்டனைச் சேர்ந்த
ராயல் ஹாலோவே பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த உயிரியல் விஞ்ஞானிகள் ஆய்வு
ஒன்றை மேற்கொண்டனர். அந்த ஆய்வறிக்கையில் அவர்கள் கூறியுள்ளதாவது

05 January 2013

பிரிட்டனின் முதலாவது கை- மாற்று அறுவை சிகிச்சை

'விரல்களை அசைக்க முடிகிறது'



தனது வலது கையில் உள்ள விரல்களை அசைத்துப்
பார்க்க முடிவதைப் பார்த்து வாயில்
சிரிப்புடன் கண்களில் ஆச்சரியம் கலந்த
மகிழ்ச்சியுடன் மார்க் காஹில் பேசுகிறார். 51
வயதான
அவருக்கு ஒருவாரத்துக்கு முன்னர்தான் கை- மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
பிரிட்டனில் முதல் தடவையாக
அறுவை சிகிச்சை மூலம் புதிதாக மனிதக்
கையொன்றைப் பொருத்திக்கொண்டுள்ள முதல் நபர்
இவர்தான். பிரிட்டனில் லீட்ஸ்
மருத்துவமனையில் எட்டு மணி நேரம் நடந்த அறுவை சிகிச்சையின்
போதுதான் இவரது பழைய
கை அகற்றப்பட்டு புதிதாக கொடையாளி ஒருவர்
வழங்கியிருந்த கையொன்று அவருக்குப்
பொருத்தப்பட்டது. 20 ஆண்டுகளுக்கு முன்னர்
இவரது காலிலும் விரல்களிலும் மூட்டுவாதம் ஏற்பட்டது.
பின்னர் அதுவே 5 ஆண்டுகளுக்கு முன்னர்
அவரது வலது கைக்கும் பரவியது.
அவரது கை விரல்களை விரிக்கமுடியாதபடி,
கையினால் எதனையும் செய்ய முடியாத
நிலையும் ஏற்பட்டது. 'எனது கை' பயோனிக் என்ற நவீன செயற்கை முறை இயந்திரக்
கையை பொருத்துவது தான்
ஒரே வழி என்று இருந்தபோது தான், இவர்
இன்னொரு மனிதக் கையை பொருத்தும் கை-
மாற்று அறுவை சிகிச்சை செய்துபார்க்கச்
சம்மதித்தார். இவருக்கு புதிய கையை பொருத்திய மருத்துவ
நிபுணர் பேராசிரியர் சைமன் கே,
இவரது புதிய கையில் இன்னும் பெரிய
முன்னேற்றம் தெரியும் என்று பிபிசியிடம்
நம்பிக்கை தெரிவித்தார்.
கை மாற்று சிகிச்சைகள் அமெரிக்காவிலும் பிரான்சிலும் இதற்கு முன்னர்
நடந்திருக்கின்றன. உலகெங்கிலும் இவ்வாறான
60 கை-மாற்று சிகிச்சைகள்
இதுவரை நடந்துள்ளன. லீட்ஸ் மருத்துவமனையில்
இப்போது நடந்திருக்கின்ற பிரிட்டனின்
முதலாவது முயற்சி, கை கால்களை இழந்துள்ள பலருக்கு இதுபோல உதவமுடியும் என்கிற
நம்பிக்கையை இன்னும்
அதிகப்படுத்தியிருக்கிறது. பிரிட்டனில்
கிட்டத்தட்ட 2 ஆண்டுகள் இந்த கை-
மாற்று சிகிச்சைக்கான திட்டமிடல்கள்
நடந்துவந்தன. பிரிட்டன் மருத்துவத் துறையின் இந்தக்
கன்னி முயற்சிக்கு பொருத்தமான ஒருவர்
கிடைக்கும்வரை காத்திருந்தார்கள்.
உடல்நிலையில் பொருத்தமானவராகவும்
இன்னொருவரின்
கையை பொருத்திக்கொள்ளுமளவிற்கு மனதளவில் தயாரானவராகவும் ஒருவர் கிடைக்க
வேண்டி இருந்தது. 'இதனை இன்னொருவரின்
கை என்று நான்
நினைக்கவே இல்லை. எனது கையைப் போலத்தான்
நான் உணர்கிறேன். என்னால் எனது கையைபோல
அசைக்கமுடிகிறது.. அப்படித்தான் உணர்கிறேன்' என்று பிபிசியிடம் கூறினார்
மார்க் காஹில். இவரது ஆசை முழுமையாக
நிறைவேற இன்னும்
காலம் எடுக்கும். ஆனால் இப்போதே அவரால்
விரல்களை அசைத்துப்பார்க்க
முடிகிறது என்பதே ஒரு பெரிய தெம்பையும் நம்பிக்கையையும் கொடுக்கிறது.




Thanks:bbc

04 June 2012

நம் வாழ்நாளில் காண முடியாத அறிய நிகழ்வைக் காண













சூரிய கிரகணம் நமக்குத் தெரியும். நிலா பூமிக்கும் சூரியனுக்கும் பூமிக்கும் இடையில் வந்து சூரியனை மறைக்கும் நிகழ்வு சூரிய கிரகணம். இந்நிகழ்ச்சிஅடிக்கடி நடைபெறுவதை நாம் பார்த்திருக்கிறோம். சந்திர கிரகணமும் நாம் அறிந்ததே. ஆனால் சூரியனுக்கும் பூமிக்கும் இடையில் இன்னொரு கோளான வெள்ளி சூரியனின் பரப்பை மறைக்கும் நிகழ்வு ஒன்று உண்டு. அதற்கு வெள்ளிக் கடவு.(Venus Transit) என்று பெயர்.இது மிகவும் அறிய நிகழ்வாகும். இந்நிகழ்வை ஜூன்6, 2012 அன்று காலையில் சூரியன் உதித்ததில் இருந்தே இதனைக் காணலாம்.
இதுபோல் அடுத்த நிகழ்வு 125 ஆண்டுகளுக்குப் பிறகு 2117 டிசம்பரில்தான் நடக்கும். ஒரு நூற்றாண்டில் இரண்டு முறை மட்டுமே வெள்ளிக் கடவு நடக்கும்.
சூரிய கிரகணம் போல் இது சூரியனை முழுவதுமாக மறைக்காது. சூரியனின் பரப்பை சிறு கருப்புப் பந்து கடப்பது போல் சூரியனை இடமிருந்து வலமாகக் கடக்கும் இதனை வெறும் கண்களால் காண இயலாது. இந்த நிகழ்வின்போது சூரியனை நேரடியாக வெறும் கண்களால் பார்க்கக் கூடாது. அதற்கென்று வடிகட்டி(filter) பொருத்தப்பட்ட கண்ணாடிகளையே பயன்படுத்தவேண்டும்.புகை படியவைக்கப்பட்ட கண்ணாடிகள் வழியாகவோ கூலிங் க்ளாஸ் வழியாகவோ பார்க்கக் கூடாது.
இதைப் பார்க்க எளிய வழி சிறிய முகம்பார்க்கும் கண்ணாடி சூரிய ஒளியை அறைக்குள் ஊசி முனை ஒரு அட்டையில் அளவுள்ள துளையின் வழியே செலுத்தி பிரதிபலித்து அந்த பிம்பம் சுவற்றில் விழும்படி செய்ய வேண்டும். அந்த பிம்பம் வட்ட வடிவமாக இருக்கும். அதில் வெள்ளி கோள் சிறு புள்ளியாக கடந்து செல்வதை பார்க்கமுடியும்.
சுவற்றில் விழும் பிம்பத்தைத்தான் பார்க்க வேண்டுமே தவிர கண்ணாடியிலும் சூரியனைப் பார்க்கக் கூடாது.

படத்தில் உள்ளதுபோல் ஒரு பந்தில் சிறுமுகம் பார்க்கும் கண்ணாடித் துண்டை ஒட்டி சூரிய ஒளியை பிரதிபலிக்கச் செய்யலாம். சூரிய ஒளியின் திசையை எளிதில் மாற்றி அமைத்து சுவற்றில் பிம்பம் விழச் செய்யவே பந்தின்மீது கண்ணாடி ஒட்டப்பட்டு ஒரு டம்பளர் மேல் வைக்கப்பட்டுள்ளது.

 மேற்கண்ட படத்தில்உள்ளதுபோலவும்  பார்க்கலாம்.

(தினந்தோறும் கிழக்கு வானில் நட்சத்திரம் ஒன்று  ஜொலிப்பது தெரியும்.உண்மையில்  அது நட்சத்திரம் அல்ல. வெள்ளிக் கோளாகும். மாலையில் இதனை மேற்கிலும் காணலாம்.)

   இந்த  நிகழ்ச்சியை June 6ஆம்தேதி காலை 5.50 முதல் 10.30 வரை காணலாம்.
   உங்கள் பிள்ளைகள் ,தம்பி தங்கைகளுக்கு பாதுகாப்புடன் இந்நிகழ்வை காட்டி மகிழுங்கள். 




Thanks tnmurali.blogspot.com



21 October 2011

'உப்பு அதிகமானால் ஆரோக்கியம் கெடும்'


உணவில் உப்பின் அளவை பதினைந்து சதவீதம் குறைத்தால் உலக அளவில் அடுத்த பத்து ஆண்டுகளில் எண்பது லட்சம் பேர் உயிர்களைக் காப்பாற்ற முடியும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
மக்கள் தங்கள் ஆரோக்கியம் மேம்பட புகையிலை பழக்கத்தை நிறுத்துவதற்கு அடுத்தபடியாக செய்ய வேண்டிய முக்கிய விஷயம், அவர்கள் தாங்கள் உட்கொள்ளும் உப்பின் அளவை குறைத்துக்கொள்வதுதான் என ஆராய்ச்சியாளர்கள் சொல்கின்றனர்.

உலக சுகாதார நடவடிக்கைகள் முன்னுரிமை தரும் விஷயமாக உப்புக் குறைப்பை ஐ.நா. மன்றம் முன்னிறுத்த வேண்டும் என அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
தொழிற்சாலை உற்பத்தி உணவுப் பொருட்களில் உப்பின் அளவை கண்காணித்து ஒழுங்குசெய்வதற்கு செயல்திறன் மிக்க வழிவகைகள் உருவாக்கப்பட வேண்டும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
நாம் வாங்கும் உணவுப் பொருட்களில்ஏற்கனவே கலந்துள்ள உப்புதான் நம் உடம்பில் உப்பின் அளவு அதிகமாவதற்கு காரணமாக இருக்கிறது.
ஆகவே ஒருவர் தானாக முன்வந்து உப்பை குறைப்பது என்பது அவ்வளவாகப் பலன் அளிக்காது, தாம் உருவாக்கும் உணவுப் பொருட்களில் உப்பின் அளவைக் குறைக்கச் சொல்லி உற்பத்தி நிறுவனங்களை வற்புறுத்த வேண்டும் என்று ஆராய்ச்சியாளர்கள் சொல்கின்றனர்.
பிரிட்டனில் உள்ள வாரிக் மற்றும் லிவர்பூல் பல்கலைக்கழகம் இணைந்து இதுதொடர்பான ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளனர்.
உப்பு அதிகம் சாப்பிட சாப்பிட, அதிக உப்பு இருந்தால்தான் உணவு சுவையாக இருப்பதாக நாம் உணர ஆரம்பித்துவிடுவோம். அது நாம் உட்கொள்ளும் உப்பின் அளவு அதிகரித்துக்கொண்டேபோக வழிவகுத்துவிடும் என இந்த ஆய்வறிக்கையைத் தயாரித்தவர்களில் ஒருவரான பேராசிரியர் பிரான்ஸிஸ்கோ கப்பூசியோ கூறுகிறார்.
உடலில் கலக்கும் உப்பின் அளவுக்கும், இரத்தக் கொதிப்பின் அளவுக்கும் நேரடித் தொடர்பு இருப்பதை ஆய்வுகள் காட்டுகின்றன.
இருதய நோய், வாதம், சிறுநீரகப் பாதிப்பு போன்றவற்றின் காரணியாக இரத்தக் கொதிப்பு அமைந்துள்ளது.
நன்றி BBC தமிழோசை.

ஆயுளைக் குறைக்கும் உடல் பருமன்


பல காலம் தொடர்ந்து இருக்கும் உடல் பருமனால் ஏற்படக் கூடிய நீண்ட கால பாதிப்புகள் முன்பு எண்ணப்பட்டதை விட மோசமாக இருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.
கூடுதல் எடையுடன் ஒருவர் எவ்வளவு காலம் இருக்கிறாறோ அவ்வளவுக்களவு அவரின் ஆயுட்காலம் குறையும் என்றும் - பருமனால் ஏற்படக் கூடிய வியாதிகளால் உயிரிழக்கும் அபயாம் இரட்டிப்பாகிறது என்றும் அமெரிக்காவில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.
முந்தைய ஆய்வுகளைப் போலல்லாமல் ஒருவரின் ஆயுட்காலத்தில் கூடுதல் பருமனால் எத்தகைய பாதிப்புகள் ஏற்படுகின்றன என்பது, முதல் முறையாக இதில் ஆராயப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் சுமார் 50 ஆண்டு காலமாக, ஐயாயிரம் பேரின் உடல் நலம் மற்றும் உடல் எடை போன்றவற்றை கவனித்து செய்யப்பட்ட ஆய்வில் இந்த முடிவுகள் தெரியவந்துள்ளன.
பத்தாண்டுகள் கூடுதல் பருமனுடன் ஒருவர் இருந்தால், பருமன் தொடர்புடைய நோய்களால் அவர் இறப்பதற்கான வாய்ப்புகள் இரட்டிப்பாவதாக கண்டறியப்பட்டுள்ளது.
ஒருவர் எவ்வளவு ஆண்டுகள் கூடுதல் பருமனுடன் இருந்தார் என்பதை கண்டறிந்த பிறகு, அதற்குரிய சிகிச்சைகளை டாக்டர்கள் வழங்க முற்பட வேண்டும் என்றும். அப்போதுதான் அது சரியான பயனைத் தரும் என்றும் ஜர்னல் ஆஃப் எபிடிமாலஜி என்ற மருத்துவ சஞ்சிகையில் வெளியிடப்பட்ட ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

சென்னையின் நிலைமை

மேற்கத்திய நாடுகளில் கடந்த இருபது முப்பது ஆண்டுகளாகவே உடல் பருமன் என்பது ஒரு உடல் ஆரோக்கியப் பிரச்சனையாக இருந்து வருகிறது.
ஆனால் உணவுப் பழக்கங்களில் ஏற்படும் மாற்றங்கள், அதிக அளவு நொறுக்குத் தீனி உண்பது போன்றவற்றால் வளரும் நாடுகளிலும் உடல் பருமன் பிரச்சனை தற்போது அதிகமாகிறது.
சமீபத்தில் சென்னை நகரில் சி பி எஸ் ஈ பள்ளிக் கூட மாணவர்களிடம் நடத்திய ஆய்வின் போது, மாணவர்களில் நான்கில் ஒருவர் கூடுதல் எடையுடன் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
பள்ளி மாணவர்கள் போதிய அளவுக்கு வெளிக்கள விளையாட்டுகளில் பங்கேற்காமையும் நொறுக்குத் தீனி அதிகம் உண்பதும் இதற்கு முக்கியக் காரணம் என்று தமிழகத்தில் உடல் பருமன் குறித்து ஆய்வு மேற்கொண்ட சென்னை எம் வி நீரிழிவு நோய் மருத்துவமனையைச் சேர்ந்த ஆய்வாளர் டாக்டர் சத்யவாணி தமிழோசையிடம் தெரிவித்தார்.

நன்றி BBC தமிழோசை