இஸ்ரேலுக்கும் பலஸ்தீனத்திற்கு மிடையில் யுத்த நிறுத்தம்
மேற்கொள்ளப்பட்ட ிருப்பதாக பலஸ்தீன ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸ்
அறிவித்துள்ளார் . எகிப்தின் கண்காணிப்பில் இடம்பெற்ற இந்த
யுத்தநிறுத்தத்த
ினை ஏற்படுத்த பங்களித்த கட்டார் மற்றும் அமெரிக்க வெளிவிவகார
அமைச்சர் ஜோன் கெரி ஆகியோருக்கு மஹ்மூத் அப்பாஸ்
நன்றி தெரிவித்துள்ளார ். யுத்த நிறுத்தம் குறித்த தகவல் வெளியிட்டுள்ள
இஸ்ரேலிய சென்னல் 2
தொலைக்காட்சி சேவை, யுத்த நிறுத்தத்திற்கு இஸ்ரேல் உடன்பட்டிருப்பத
ாகவும் அதனை இஸ்ரேலிய பிரதமர் அறிவித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது .
ஹமாஸ் இயக்கத்தின் பேச்சாளர் ஸாமி அபூ ஸஹ்ரி தெரிவிக்கையில்,
இஸ்ரேலிய இராணுவத்தை போராளிகள் வென்றுள்ளனர். யுத்தநிறுத்தம்
அறிவிக்கப்பட சற்று முன்பதாக இரு இஸ்ரேலிய
இராணுவத்தினரை போராளிகள் கொன்றுள்ளனர் எனத் தெரிவித்துள்ளார ்.
பத்திரிகையாளர்க ளுக்கு கருத்து தெரிவித்த அபூ ஸஹ்ரி, காஸா
சுற்றுப்புறத்தி லிருந்து வெளியேறிச் சென்ற இஸ்ரேலியர்கள் மீண்டும் தமது
வீடுகளுக்குத் திரும்ப ஹமாஸ்
அனுமதியளிப்பதாகதெரிவித்துள்ளார ். இஸ்ரேல் மீது போராளிகள் வான்
முற்றுகையொன்றை மேற்கொண்டு ஒட்டு மொத்த அறபுப் படைகளால் இயலாமல்
போனதை பலஸ்தீனப் போராளிகள் சாதித்துக் காட்டியுள்ளனர்.
மில்லியன் கணக்கான இஸ்ரேலியர்கள் பாதுகாப்புத் தேடிச் செல்ல
நிர்ப்பந்திக்கப ்பட்டனர். அடக்கமுடியாத இராணுவம் என்று தம்மட்டமடித்துக
் கொண்டிருந்தவர்க ளின் மரியாதையை போராளிகள் காற்றில் பறக்க விட்டுள்ளனர்
எனவும் அவர்
மேலும் தெரிவித்துள்ளார ். இந்த யுத்த உடன்படிக்கை குறிப்பிட்ட கடவைகளை திறப்பதல்ல.
குத்ஸை விடுவித்து முழு பலஸ்தீன வரலாற்றுப் பூமியையும் மீட்கும்
வரை தொடரும் எனவும் ஹமாஸின் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார
். இஸ்ரேலிய இராணுவத்தை படுதோல்வியடைச் செய்த
நிகழ்வையிட்டு ஆயிரக்கணக்கான பலஸ்தீனர்கள் தெருவோரங்களில்
இறங்கி மகிழ்ச்சியை கொண்டாடி வருகின்றனர்.
Thanks:Meelparvai Media Centre
ஊர் செய்திகள்
date
27 August 2014
24 August 2014
sltj blood donation-maggona
SLTJ மக்கொன மற்றும் பேருவலைக் கிளைகள் இணைந்து நடாத்திய இரத்ததான முகாம் நேற்று (23/08/2014) மக்கொன அல் ஹஸனியா மகா வித்தியாலயத்தில் நடைபெற்றது.
இந் நிகழ்வில் 103 பேர் இரத்ததானம் செய்தனர்.அல்ஹம்துலில்லாஹ்.
இந் நிகழ்வில் 103 பேர் இரத்ததானம் செய்தனர்.அல்ஹம்துலில்லாஹ்.
23 August 2014
உலகெங்கிலும் சூடுபிடிக்கும் 'ஐஸ் பக்கெட்' சவால் (video)
ஏ.எல்.எஸ் (Amyotrophic lateral sclerosis) எனப்படும் நோயைப்
பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும், அந்த நோயால்
பாதிக்கப்பட்டவர்களுக்காக நிதி சேர்க்கவும் இந்த ஐஸ் பக்கெட்
சவாலை பலர் மேற்கொண்டுள்ளனர். இந்த நோயால் நரம்பு மண்டலம்
பாதிப்படைவதால், நோயாளிகளுக்கு நடப்பது, பேசுவது போன்ற
செயல்கள் மிகக் கடினம். ஒரு கட்டத்தில் அவை சுத்தமாக நின்றும் போகும்.
இது மரணத்தில் முடியும் அபாயமும் உள்ளது.
விதிகள்
முதல் விதி, இந்த சவாலை ஏற்றுக் கொண்ட 24 மணிநேரத்தில்
இதை செய்து முடித்து 10 டாலரை மட்டும் ஏ.எல்.எஸ்
அமைப்புக்கு நன்கொடையாகத் தர வேண்டும். சவாலை செய்ய
முடியவில்லை என்றால் 100 டாலர்களை நன்கொடையாகத் தர வேண்டும். ஏற்றுக்
கொள்பவர்கள் முதலில் கேமராவின் முன் நின்று தாம் இந்த
சவாலை ஏற்றுக் கொள்வதாக தெரிவிக்க வேண்டும். அடுத்து ஐஸ்
கட்டிகள் நிறைந்த பக்கெட் அல்லது, ஐஸ் கட்டிகள் கரைந்த பக்கெட்
நீரை நிறுத்தாமல் தலையில் ஊற்றிக் கொள்ளவேண்டும். அடுத்து,
தனக்குத் தெரிந்த ஒருவருக்கோ, பலருக்கோ சவால் விட வேண்டும்.
அவ்வளவே.
ஐஸ் பக்கெட் சாலஞ்சை திரை, விளையாட்டு மற்றும் அரசியல்
பிரபலங்கள் பலர் செய்து வருவதால், அவர்களின் சவால் வீடியோக்கள்
சமூக வலைதளங்களில் படுவேகமாகப் பரவி வருகின்றன.
பொதுமக்கள் பலரும் தங்கள் பங்குக்கு தலையில் தண்ணீர்
ஊற்றி அதை வீடியோவில் பதிவு செய்து, பகிர்ந்து வருகின்றனர்.
எக்குத்தப்பாக செய்து நகைச்சுவையில் முடிந்த வீடியோக்களும் உள்ளன. மார்க்
ஸக்கர்பெர்க், பில் கேட்ஸ், ஜார்ஜ் புஷ், பிரிட்னி ஸ்பியர்ஸ்,
'ராக்' டுவைன் ஜான்சன், அண்டர்டேகர், கெவின் பீட்டர்சன், லயனல்
மெஸ்ஸி என எண்ணற்ற பிரபலங்களது ஐஸ் பக்கெட் சவால் வீடியோக்கள்
யூடியூபில் காணக் கிடக்கின்றன. அமெரிக்க அதிபர் ஒபாமாவிற்கு பலரும் சவால்
விட்டிருந்தனர்.
ஆனால், ஒபாமா, அதற்கு பதிலாக நன்கொடை அளித்து விடுவதாக
உறுதியளித்துள்ளார்.
இந்த சவால் பிரபலமானதால், ஏ.எல்.எஸ் பற்றிய
விழிப்புணர்வு அதிகரித்துள்ளதாகவும், கடந்த சில வாரங்களில்
மட்டும் 15.6 மில்லியன் டாலர் நன்கொடை சேர்ந்துள்ளதாகவும்
ஏ.எல்.எஸ் அமைப்பு தெரிவித்துள்ளது. ஜூன் முதல் வாரத்தில்
இருந்து, ஆகஸ்ட் இரண்டாம் வாரம் வரை, கிட்டத்தட்ட 1.2 மில்லியன்
ஐஸ் பக்கெட் சவால் வீடியோக்கள் ஃபேஸ்புக்கில் பகிரப்பட்டுள்ளதாக ஒரு
புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. மேலும் 2.2 மில்லியன்
முறை, இந்த வார்த்தை தங்களது பயனர்களால்
குறிப்பிடப்பட்டுள்ளதாக ட்விட்டர் தளம் தெரிவித்துள்ளது.
விமர்சனங்கள்
வழக்கம் போல, ஐஸ் பக்கெட் சாலஞ்ச் பற்றிய விமர்சனங்களும்
வந்துகொண்டுதான் இருக்கின்றன. இந்த சவாலை செய்யும் பல
பிரபலங்கள் நன்கொடை தரவேண்டும் என்பதை சொல்ல
மறந்துவிடுகின்றனர். வெறும் பரபரப்புக்காக மட்டுமே பலர்
இதை செய்து வருகின்றனர் என்ற குற்றச்சாட்டு பரவலாக
எழுந்துள்ளது. எது எப்படியோ, எளிமையான ஒரு செயலின் மூலம், உலகை
திரும்பிப் பார்க்க வைக்க முடியும் என்று இந்த ஐஸ் பக்கெட்
சாலஞ்ச் நிரூபித்துள்ளது.
Thanks
BBC
தி இந்து
பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும், அந்த நோயால்
பாதிக்கப்பட்டவர்களுக்காக நிதி சேர்க்கவும் இந்த ஐஸ் பக்கெட்
சவாலை பலர் மேற்கொண்டுள்ளனர். இந்த நோயால் நரம்பு மண்டலம்
பாதிப்படைவதால், நோயாளிகளுக்கு நடப்பது, பேசுவது போன்ற
செயல்கள் மிகக் கடினம். ஒரு கட்டத்தில் அவை சுத்தமாக நின்றும் போகும்.
இது மரணத்தில் முடியும் அபாயமும் உள்ளது.
விதிகள்
முதல் விதி, இந்த சவாலை ஏற்றுக் கொண்ட 24 மணிநேரத்தில்
இதை செய்து முடித்து 10 டாலரை மட்டும் ஏ.எல்.எஸ்
அமைப்புக்கு நன்கொடையாகத் தர வேண்டும். சவாலை செய்ய
முடியவில்லை என்றால் 100 டாலர்களை நன்கொடையாகத் தர வேண்டும். ஏற்றுக்
கொள்பவர்கள் முதலில் கேமராவின் முன் நின்று தாம் இந்த
சவாலை ஏற்றுக் கொள்வதாக தெரிவிக்க வேண்டும். அடுத்து ஐஸ்
கட்டிகள் நிறைந்த பக்கெட் அல்லது, ஐஸ் கட்டிகள் கரைந்த பக்கெட்
நீரை நிறுத்தாமல் தலையில் ஊற்றிக் கொள்ளவேண்டும். அடுத்து,
தனக்குத் தெரிந்த ஒருவருக்கோ, பலருக்கோ சவால் விட வேண்டும்.
அவ்வளவே.
ஐஸ் பக்கெட் சாலஞ்சை திரை, விளையாட்டு மற்றும் அரசியல்
பிரபலங்கள் பலர் செய்து வருவதால், அவர்களின் சவால் வீடியோக்கள்
சமூக வலைதளங்களில் படுவேகமாகப் பரவி வருகின்றன.
பொதுமக்கள் பலரும் தங்கள் பங்குக்கு தலையில் தண்ணீர்
ஊற்றி அதை வீடியோவில் பதிவு செய்து, பகிர்ந்து வருகின்றனர்.
எக்குத்தப்பாக செய்து நகைச்சுவையில் முடிந்த வீடியோக்களும் உள்ளன. மார்க்
ஸக்கர்பெர்க், பில் கேட்ஸ், ஜார்ஜ் புஷ், பிரிட்னி ஸ்பியர்ஸ்,
'ராக்' டுவைன் ஜான்சன், அண்டர்டேகர், கெவின் பீட்டர்சன், லயனல்
மெஸ்ஸி என எண்ணற்ற பிரபலங்களது ஐஸ் பக்கெட் சவால் வீடியோக்கள்
யூடியூபில் காணக் கிடக்கின்றன. அமெரிக்க அதிபர் ஒபாமாவிற்கு பலரும் சவால்
விட்டிருந்தனர்.
ஆனால், ஒபாமா, அதற்கு பதிலாக நன்கொடை அளித்து விடுவதாக
உறுதியளித்துள்ளார்.
இந்த சவால் பிரபலமானதால், ஏ.எல்.எஸ் பற்றிய
விழிப்புணர்வு அதிகரித்துள்ளதாகவும், கடந்த சில வாரங்களில்
மட்டும் 15.6 மில்லியன் டாலர் நன்கொடை சேர்ந்துள்ளதாகவும்
ஏ.எல்.எஸ் அமைப்பு தெரிவித்துள்ளது. ஜூன் முதல் வாரத்தில்
இருந்து, ஆகஸ்ட் இரண்டாம் வாரம் வரை, கிட்டத்தட்ட 1.2 மில்லியன்
ஐஸ் பக்கெட் சவால் வீடியோக்கள் ஃபேஸ்புக்கில் பகிரப்பட்டுள்ளதாக ஒரு
புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. மேலும் 2.2 மில்லியன்
முறை, இந்த வார்த்தை தங்களது பயனர்களால்
குறிப்பிடப்பட்டுள்ளதாக ட்விட்டர் தளம் தெரிவித்துள்ளது.
விமர்சனங்கள்
வழக்கம் போல, ஐஸ் பக்கெட் சாலஞ்ச் பற்றிய விமர்சனங்களும்
வந்துகொண்டுதான் இருக்கின்றன. இந்த சவாலை செய்யும் பல
பிரபலங்கள் நன்கொடை தரவேண்டும் என்பதை சொல்ல
மறந்துவிடுகின்றனர். வெறும் பரபரப்புக்காக மட்டுமே பலர்
இதை செய்து வருகின்றனர் என்ற குற்றச்சாட்டு பரவலாக
எழுந்துள்ளது. எது எப்படியோ, எளிமையான ஒரு செயலின் மூலம், உலகை
திரும்பிப் பார்க்க வைக்க முடியும் என்று இந்த ஐஸ் பக்கெட்
சாலஞ்ச் நிரூபித்துள்ளது.
Thanks
BBC
தி இந்து
21 August 2014
தலையை விட பெரிதாக உள்ள கைகளால் அவதிப்படும் சிறுவன்
புதுடெல்லி, ஆக. 21-
இந்தியாவை சேர்ந்த சிறுவனான எட்டு வயது சிறுவனான
கலீமுக்கு அவனது தலையை விட கைகள் பெரிதாக
உள்ளது வருத்தத்தை தருகிறது.
மருத்துவத்துறையோ அவனது கைகளின்
வளர்ச்சியை பார்த்து குழம்பிப்போய் கிடக்கிறது. பிறக்கும்போதே இயல்பான
குழந்தைகளின் விரல்களை விட
இரு மடங்கு பெரிதாக கலீமின் விரல்கள் இருந்துள்ளது.
தொடர்ந்து நாளுக்கு நாள் விரல்களின் வளர்ச்சி மேலும் மேலும்
பெரிதானது. அவனது உள்ளங்கையிலிருந்து நடுவிரலின்
முடிவு வரை கணக்கிட்டால் 13 இஞ்ச் அளவுக்கு அவனது கைகள்
வளர்ச்சியடைந்துள்ளது தெரிகிறது. மிகவும் அபரிதமான கைகளின் வளர்ச்சியால்
இச்சிறுவன் ஷு லேஸ் கட்டுவதற்கும்,
உடைகளை அணிந்து கொள்வதற்கும் மற்ற செயல்களை செய்வதற்கும்
சிரமப்படவேண்டியுள்ளது.
தன்னை பார்த்து மற்றவர்கள் பயப்படுவதால்
தனது வாழ்க்கையே தனிமையில் கழிவதாக சிறுவன் கலீம் சோகத்துடன்
கூறியுள்ளான். மாதம் ஒன்றிற்கு 1500 ரூபாய் மட்டுமே சம்பாதிக்கும்
கலீமின் பெற்றோர் தங்கள் சக்திக்கு ஏற்ற
வகையில் அவனது சிகிச்சைக்கு செலவு செய்துவருகின்றனர்.
ஆனால் அவனை பரிசோதிக்கும்
மருத்துவர்களோ குழம்பிப்போய்விடுவதாக அவனது பெற்றோர்கள்
கூறுகின்றனர். கைகளின் வளர்ச்சியை தவிர்த்து பார்த்தால் கலீம் நல்ல நலத்துடன்
இருப்பதாக கூறியுள்ள மருத்துவர் ஒருவர், அவன்
லிம்பாஞ்சியோமா அல்லது ஹமார்டோமா நோயால்
பாதிக்கப்பட்டிருக்கலாம் என தெரிவித்துள்ளார்.
இரண்டுமே உடலின் குறிப்பிட்ட பாகத்தில் அதிகப்படியான
வளர்ச்சியை தரும் நோய் ஆகும். தங்கள் மகனுக்கு என்றாவது ஒரு நாள் நல்லது நடக்கும்
என்று நம்பிக்கையுடன் கூறிய அவனது பெற்றோர்களான ஷமிம்-
ஹலீமா தம்பதியர் அதுவரை தாங்கள் காத்திருப்பதை தவிர
வேறு வழியில்லை என்று தெரிவித்தனர்.
நன்றி:மாலைமலர்
19 August 2014
சுத்தமாகும் லண்டன் 'பிக் பென்' கடிகாரம் video
லண்டனின் வெஸ்ட்மின்ஸ்டர் அரண்மனையில் ( நாடாளுமன்றம் இருக்கும்
இடம்) இருக்கும் பிரசித்தி பெற்ற பிக் பென் கடிகாரம் 2010ம்
ஆண்டிலிருந்து முதன் முறையாக சுத்தம் செய்யப்படுகிறது. எலிசபத்
கோபுரத்தின் மீது ஊழியர்கள், இந்த சுத்தம் செய்யும்
வேலையைச் செய்ய அங்கு இறங்கிக்கொண்டிருக்கிறார்கள். இந்த வேலை நடக்கும்
போது, இந்த கடிகாரம் மணியடிக்கும், நேரம்
காட்டும். ஆனால் அதன் நேரங்காட்டும் முட்கள் தற்காலிமாக
வேலை நடக்கும்போது நிறுத்திவைக்கப்படும். இந்தக் கடிகாரத்தின் நான்கு
முகங்கள் ஒவ்வொன்றும், 312 கண்ணாடித்
துண்டுகளால் ஆனவை. இந்த வேலையைச் செய்ய ஐந்து நாட்கள்
வரை பிடிக்கும்.
Source:bbc
இதையும் பார்க்கவும்
Big Ben - behind the scenes
இடம்) இருக்கும் பிரசித்தி பெற்ற பிக் பென் கடிகாரம் 2010ம்
ஆண்டிலிருந்து முதன் முறையாக சுத்தம் செய்யப்படுகிறது. எலிசபத்
கோபுரத்தின் மீது ஊழியர்கள், இந்த சுத்தம் செய்யும்
வேலையைச் செய்ய அங்கு இறங்கிக்கொண்டிருக்கிறார்கள். இந்த வேலை நடக்கும்
போது, இந்த கடிகாரம் மணியடிக்கும், நேரம்
காட்டும். ஆனால் அதன் நேரங்காட்டும் முட்கள் தற்காலிமாக
வேலை நடக்கும்போது நிறுத்திவைக்கப்படும். இந்தக் கடிகாரத்தின் நான்கு
முகங்கள் ஒவ்வொன்றும், 312 கண்ணாடித்
துண்டுகளால் ஆனவை. இந்த வேலையைச் செய்ய ஐந்து நாட்கள்
வரை பிடிக்கும்.
Source:bbc
இதையும் பார்க்கவும்
Big Ben - behind the scenes
14 August 2014
ஸ்ரீலங்கா தௌஹீத் ஜமாஅத்தின் இஸ்ரேல் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம
காஸாவில் இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல்களைக்
கண்டித்து நேற்று கொழும்பு,
மாளிகாவத்தை பிரதேசத்திலிருந்து பஞ்சிகாவத்தை பகுதி
வரையில் ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாத் அமைப்பால் ஆர்ப்பாட்டம்
ஒன்று நடத்தப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து, அந்த
இடத்துக்கு பொதுபலசேனா அமைப்பின் பொதுச்செயலாளர்
கலகொடஅத்தே ஞானசார தேரர் உட்பட ஒரு குழுவினர் சென்றதாகவும்
அதன் போது பொலிஸார் இரு தரப்பினரிடமும் சுமுகமாகப்
பேசி அமைதியான முறையில்
அவ்விடத்திலிருந்து அனுப்பி வைத்தாகவும் பொலிஸ் ஊடகப் பிரிவு
தெரிவித்தது. பொதுபலசேன, சிஹலராவய, தெவ்ஹீத் ஜமாத் அமைப்புகளால் கோட்டை,
புறக்கோட்டை பிரதேசங்களில் நேற்று நடாத்த
ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஆர்ப்பாட்டங்கள் மற்றும்
கூட்டங்களுக்கு பொலிஸார் கொழும்பு கோட்டை நீதவான்
நீதிமன்றத்தில் நேற்று முன்தினம்
தடை உத்தரவு ஒன்றினை பெற்றிருந்தனர். இந்த நிலையில் ஸ்ரீலங்கா தவ்ஹீத்
ஜமாத், குறித்த ஆர்ப்பாட்டத்தை மாளிகாவத்தையில்
நேற்று நடத்தியது. பலஸ்தீனம் மீதான இஸ்ரேலின் மிலேச்சத்தனமான
தாக்குதலுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் முகமாக
கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்துக்கு முன்னால்
ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்க ஏற்பாடு செய்திருந்த
போது பொதுபலசேன அமைப்பினர் உலகில் எங்குமே இடம் பெறாத
வகையில் இஸ்ரேலுக்கு ஆதரவாக ஓர் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுக்க
முயற்சித்ததனையடுத்து பொலிஸார் நீதிமன்ற உத்தரவைப்
பெற்று கொழும்பு கோட்டை, புறகோட்டை பிரதேசங்களில்
ஆர்ப்பாட்டம் செய்வதனைத் தடுத்தாகவும்
அதனை அடுத்தே இப்பிரதேசத்தில் தாங்கள்
நேற்று ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தாகவும் இதில் சுமார் 10,000
பேர் கலந்து கொண்டதகவும் ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் துணைச்
செயலாளர் ரஸ்மின் தெரிவித்தார்.
ஐ. நா ஈரான், ஈராக் யுத்தங்களின்
போது தமது படைகளை அனுப்பியது போல் இஸ்ரேலுக்கும்
படைகளை அனுப்பி இந்த யுத்ததை முடிவுக்கு கொண்டுவரவேண்டும்,
நவனீதன் பிள்ளை இலங்கை தொடர்பில் மேற்கொள்ளும்
விசாரணை போன்றே இஸ்ரோலில் இடம் பெறும்
செயற்பாடுகளுக்கு எதிராகவும் விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும், இலங்கை
அரசு இஸ்ரேலுடனான அனைத்து உறவுகளையும்
துண்டிக்கவேண்டும் எனவும் இலங்கையில் உள்ள இஸ்ரேல்
நலன்புரி நிலையத்தை உடனடியாக அகற்ற வேண்டும் எனவும்
தமது கோரிக்கைகளை இவ்வார்பாட்டதில் முன்வைத்தாகவும்
தெரிவித்தார். ஆர்ப்பாட்டத்தின் போது ஞானசார தேரர் உட்பட ஒரு குழுவினர்
இரு ஜீப்வண்டிகளில்
வந்து ஆர்ப்பாட்டத்தை நிறுத்துமாறு கூறியதாகவும் அதன்
போது பொலிஸார்
தலையிட்டு அவர்களை திருப்பி அனுப்பியதாகவும் அவர் மேலும்
தெரிவித்தார். சட்ட ஆட்சி அமுலில் உள்ள ஒரு நாட்டில் சாதாரணமான இவ்வாறான
அமைப்புகள்
வந்து இவ்வாறு தமது அழுத்தங்களை பிரயோகிப்பது கவலைக்குரிய
விடயம் என அவர் மேலும் தெரிவித்தார்.
video-
http://tinyurl.com/kuljy96
Thanks:metro news
கண்டித்து நேற்று கொழும்பு,
மாளிகாவத்தை பிரதேசத்திலிருந்து பஞ்சிகாவத்தை பகுதி
வரையில் ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாத் அமைப்பால் ஆர்ப்பாட்டம்
ஒன்று நடத்தப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து, அந்த
இடத்துக்கு பொதுபலசேனா அமைப்பின் பொதுச்செயலாளர்
கலகொடஅத்தே ஞானசார தேரர் உட்பட ஒரு குழுவினர் சென்றதாகவும்
அதன் போது பொலிஸார் இரு தரப்பினரிடமும் சுமுகமாகப்
பேசி அமைதியான முறையில்
அவ்விடத்திலிருந்து அனுப்பி வைத்தாகவும் பொலிஸ் ஊடகப் பிரிவு
தெரிவித்தது. பொதுபலசேன, சிஹலராவய, தெவ்ஹீத் ஜமாத் அமைப்புகளால் கோட்டை,
புறக்கோட்டை பிரதேசங்களில் நேற்று நடாத்த
ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஆர்ப்பாட்டங்கள் மற்றும்
கூட்டங்களுக்கு பொலிஸார் கொழும்பு கோட்டை நீதவான்
நீதிமன்றத்தில் நேற்று முன்தினம்
தடை உத்தரவு ஒன்றினை பெற்றிருந்தனர். இந்த நிலையில் ஸ்ரீலங்கா தவ்ஹீத்
ஜமாத், குறித்த ஆர்ப்பாட்டத்தை மாளிகாவத்தையில்
நேற்று நடத்தியது. பலஸ்தீனம் மீதான இஸ்ரேலின் மிலேச்சத்தனமான
தாக்குதலுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் முகமாக
கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்துக்கு முன்னால்
ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்க ஏற்பாடு செய்திருந்த
போது பொதுபலசேன அமைப்பினர் உலகில் எங்குமே இடம் பெறாத
வகையில் இஸ்ரேலுக்கு ஆதரவாக ஓர் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுக்க
முயற்சித்ததனையடுத்து பொலிஸார் நீதிமன்ற உத்தரவைப்
பெற்று கொழும்பு கோட்டை, புறகோட்டை பிரதேசங்களில்
ஆர்ப்பாட்டம் செய்வதனைத் தடுத்தாகவும்
அதனை அடுத்தே இப்பிரதேசத்தில் தாங்கள்
நேற்று ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தாகவும் இதில் சுமார் 10,000
பேர் கலந்து கொண்டதகவும் ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் துணைச்
செயலாளர் ரஸ்மின் தெரிவித்தார்.
ஐ. நா ஈரான், ஈராக் யுத்தங்களின்
போது தமது படைகளை அனுப்பியது போல் இஸ்ரேலுக்கும்
படைகளை அனுப்பி இந்த யுத்ததை முடிவுக்கு கொண்டுவரவேண்டும்,
நவனீதன் பிள்ளை இலங்கை தொடர்பில் மேற்கொள்ளும்
விசாரணை போன்றே இஸ்ரோலில் இடம் பெறும்
செயற்பாடுகளுக்கு எதிராகவும் விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும், இலங்கை
அரசு இஸ்ரேலுடனான அனைத்து உறவுகளையும்
துண்டிக்கவேண்டும் எனவும் இலங்கையில் உள்ள இஸ்ரேல்
நலன்புரி நிலையத்தை உடனடியாக அகற்ற வேண்டும் எனவும்
தமது கோரிக்கைகளை இவ்வார்பாட்டதில் முன்வைத்தாகவும்
தெரிவித்தார். ஆர்ப்பாட்டத்தின் போது ஞானசார தேரர் உட்பட ஒரு குழுவினர்
இரு ஜீப்வண்டிகளில்
வந்து ஆர்ப்பாட்டத்தை நிறுத்துமாறு கூறியதாகவும் அதன்
போது பொலிஸார்
தலையிட்டு அவர்களை திருப்பி அனுப்பியதாகவும் அவர் மேலும்
தெரிவித்தார். சட்ட ஆட்சி அமுலில் உள்ள ஒரு நாட்டில் சாதாரணமான இவ்வாறான
அமைப்புகள்
வந்து இவ்வாறு தமது அழுத்தங்களை பிரயோகிப்பது கவலைக்குரிய
விடயம் என அவர் மேலும் தெரிவித்தார்.
video-
http://tinyurl.com/kuljy96
Thanks:metro news
13 August 2014
இஸ்லாத்தை தழுவியது ஏன்? - யுவன் விளக்கம்
இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா
நான் இஸ்லாம் மதத்தை தழுவியதற்கு என் அம்மாவே காரணம் என்று இசையமைப்பாளர்
யுவன் சங்கர் ராஜா பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா, இஸ்லாம் மதத்தை தழுவினார் என்பது தமிழ்
திரையுலகினர் பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. ஆனால், அது தொடர்பாக
யுவன் விளக்கம் எதுவுமே கொடுக்கவில்லை.
யுவன், ஜெய் இருவருமே இஸ்லாம் மதத்தை தழுவி, ரம்ஜான் அன்று மசூதிக்கு
சென்று தொழுகை நடத்திய படங்கள் இணையத்தில் வெளியானது.
இந்நிலையில் ஏன் இஸ்லாம் மதத்தை தழுவினார் என்ற கேள்விக்கு முதன் முறையாக
பதிலளித்திருக்கிறார் யுவன். இது குறித்து யுவன் கூறியிருப்பது:
"எனது தந்தை தீவிரமான இந்து. ஒரு கண்ணாடி உடைந்தாலும் ஜோசியரைக்
கூப்பிடும் அளவுக்கு மூட நம்பிக்கை உடையவர். எனது பெற்றோர் பல
சம்பிரதாயங்களை பின்பற்றி வந்தனர். ஆனால் எனது சிறுவயது முதலே
இவற்றையேலாம் தாண்டி ஒரு அமானுஷ்யமான சக்தி உலகை கட்டுப்படுத்துகிறது
என்ற எண்ணம் எனக்குள் இருந்தது.
எனது மதமாற்றத்திற்கு முக்கியக் காரணமாக இருந்தது எனது அம்மாவின் மறைவு
தான். வேலையின் காரணமாக மும்பைக்கு சென்றிருந்தேன். சென்னைக்கு வந்தபோது,
அம்மா கடுமையாக இரும்பிக் கொண்டிருந்தைக் கண்டேன். நானும் எனது
சகோதரியும் அவரை மருத்துவமனைக்கு அவசரமாக அழைத்துச் சென்றோம். நான் கார்
ஓட்டிச் சென்றேன். நாங்கள் மருத்துவமனையை அடைந்தோம். அம்மாவின் கையைப்
பிடித்துக் கொண்டு, அவர் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டிருந்தேன். ஆனால்,
அடுத்த நொடி அவரது கை விழுந்தது, அவர் காலமானார். நான் அழுது கொண்டிருந்த
அதே நேரத்தில், அந்த சில நொடிகளில் அம்மாவின் ஆன்மா என்னவாகியிருக்கும்
என்று யோசிக்க ஆரம்பித்தேன், ஏனென்றால் அவர் சில விநாடிகளுக்கு முன் தான்
உயிரோடு இருந்தார்.
எனக்கான விடையைத் தேடிக் கொண்டிருக்கும்போது அல்லாவிடமிருந்து நேரடியாக
அழைப்பு வந்தது என்றுதான் சொல்ல வேண்டும். அது ஒரு ஆன்மிக அனுபவம். எனது
நண்பர் ஒருவர் அப்போது தான் மெக்காவிலிருந்து வந்திருந்தார். "நீ தற்போது
மிகவுள் தளர்ந்துள்ளாய். இதிலிருந்து நீ மீண்டு வரவேண்டும்" எனக் கூறி
ஒரு முசல்லாவை (பிரார்த்தனை செய்யும்போது பயன்படுத்தப்படும் பாய்)
எனக்குத் தந்தார். "இந்தப் பாய் மெக்காவில் நான் அமர்ந்து பிரார்த்தனை
செய்தது. இது மெக்காவை தொட்டு வந்த பாய். உன் மனது பாரமாக இருக்கும்போது
இதில் உட்கார்ந்து பார்" என்றார். நான் அந்த பாயை எனது அறையின் ஒரு
மூலையில் வைத்துவிட்டு மறந்துவிட்டேன்.
சில மாதங்கள் கழித்து எனது உறவினர் ஒருவருடன் அம்மாவைப் பற்றிப் பேசிக்
கொண்டிருந்த்போது மிகவும் பாரமாக உணர ஆரம்பித்தேன். எனது அறையில்
நுழைந்தேன், எதேச்சையாக அப்போது அந்தப் பாயைப் பார்த்தேன். எப்படி
இவ்வளவு நாள் இதை மறந்துபோனோம் என நினைத்தேன்.
முதல் முறையாக அதில் அமர்ந்தவுடனேயே நான் அழ ஆரம்பித்தேன். 'எனது
பாவங்களை மன்னியுங்கள் அல்லா' என்று வேண்டினேன். இது 2012-ஆம் ஆண்டு
நடந்தது. குரானை படிக்க ஆரம்பித்தேன். அது என்னை சீக்கிரத்தில்
ஆட்கொண்டது. இஸ்லாமை பின்பற்றி, தொழுகை செய்வதைக் கற்றுக் கொண்டேன்.
ஜனவரி 2014-ல் மதமாறுவதைப் பற்றி உறுதியாக முடிவு செய்தேன்.
படங்களில் யுவன் ஷங்கர் ராஜா என்ற பெயரையே பயன்படுத்துவதால் இதுவரை
அதிகாரப்பூர்வமாக எனது பாஸ்போர்ட் மற்றும் இதர கோப்புகளில் நான் எனது
பெயரை மாற்றவில்லை. ஆனால் சில காலம் கழித்து அதைச் செய்வேன். இதைப் பற்றி
எனது அப்பாவிற்குதான் நான் கடைசியாக தெரிவித்தேன். "நான் குரானை படிக்க
ஆரம்பித்துள்ளேன். அது எனக்கு மன அமைதியைத் தருகிறது" என்றேன். அவர்,
"யுவன், நீ இஸ்லாமியனாக மாறுவதில் எனக்கு உடன்பாடில்லை" என்றார். ஆனால்
எனது சகோதரரும் அவர் மனைவியும் எனக்கு ஆதரவளித்துள்ளனர்.
இது விசித்திரமாக இருக்கலாம். ஆனால் என் அம்மாவே என் கையைப் பிடித்துக்
கொண்டு, "யுவன், நீ தனியாக இருக்கிறாய்.. இஸ்லாம் என்ற மரத்தின் கீழ் நீ
நிற்க வேண்டும் என நான் விரும்புகிறேன்" என அவர் சொல்வதாக எனக்குப் பல
முறை தோன்றியுள்ளது." என்று கூறியுள்ளார்.
Thanks:தி இந்து
நான் இஸ்லாம் மதத்தை தழுவியதற்கு என் அம்மாவே காரணம் என்று இசையமைப்பாளர்
யுவன் சங்கர் ராஜா பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா, இஸ்லாம் மதத்தை தழுவினார் என்பது தமிழ்
திரையுலகினர் பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. ஆனால், அது தொடர்பாக
யுவன் விளக்கம் எதுவுமே கொடுக்கவில்லை.
யுவன், ஜெய் இருவருமே இஸ்லாம் மதத்தை தழுவி, ரம்ஜான் அன்று மசூதிக்கு
சென்று தொழுகை நடத்திய படங்கள் இணையத்தில் வெளியானது.
இந்நிலையில் ஏன் இஸ்லாம் மதத்தை தழுவினார் என்ற கேள்விக்கு முதன் முறையாக
பதிலளித்திருக்கிறார் யுவன். இது குறித்து யுவன் கூறியிருப்பது:
"எனது தந்தை தீவிரமான இந்து. ஒரு கண்ணாடி உடைந்தாலும் ஜோசியரைக்
கூப்பிடும் அளவுக்கு மூட நம்பிக்கை உடையவர். எனது பெற்றோர் பல
சம்பிரதாயங்களை பின்பற்றி வந்தனர். ஆனால் எனது சிறுவயது முதலே
இவற்றையேலாம் தாண்டி ஒரு அமானுஷ்யமான சக்தி உலகை கட்டுப்படுத்துகிறது
என்ற எண்ணம் எனக்குள் இருந்தது.
எனது மதமாற்றத்திற்கு முக்கியக் காரணமாக இருந்தது எனது அம்மாவின் மறைவு
தான். வேலையின் காரணமாக மும்பைக்கு சென்றிருந்தேன். சென்னைக்கு வந்தபோது,
அம்மா கடுமையாக இரும்பிக் கொண்டிருந்தைக் கண்டேன். நானும் எனது
சகோதரியும் அவரை மருத்துவமனைக்கு அவசரமாக அழைத்துச் சென்றோம். நான் கார்
ஓட்டிச் சென்றேன். நாங்கள் மருத்துவமனையை அடைந்தோம். அம்மாவின் கையைப்
பிடித்துக் கொண்டு, அவர் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டிருந்தேன். ஆனால்,
அடுத்த நொடி அவரது கை விழுந்தது, அவர் காலமானார். நான் அழுது கொண்டிருந்த
அதே நேரத்தில், அந்த சில நொடிகளில் அம்மாவின் ஆன்மா என்னவாகியிருக்கும்
என்று யோசிக்க ஆரம்பித்தேன், ஏனென்றால் அவர் சில விநாடிகளுக்கு முன் தான்
உயிரோடு இருந்தார்.
எனக்கான விடையைத் தேடிக் கொண்டிருக்கும்போது அல்லாவிடமிருந்து நேரடியாக
அழைப்பு வந்தது என்றுதான் சொல்ல வேண்டும். அது ஒரு ஆன்மிக அனுபவம். எனது
நண்பர் ஒருவர் அப்போது தான் மெக்காவிலிருந்து வந்திருந்தார். "நீ தற்போது
மிகவுள் தளர்ந்துள்ளாய். இதிலிருந்து நீ மீண்டு வரவேண்டும்" எனக் கூறி
ஒரு முசல்லாவை (பிரார்த்தனை செய்யும்போது பயன்படுத்தப்படும் பாய்)
எனக்குத் தந்தார். "இந்தப் பாய் மெக்காவில் நான் அமர்ந்து பிரார்த்தனை
செய்தது. இது மெக்காவை தொட்டு வந்த பாய். உன் மனது பாரமாக இருக்கும்போது
இதில் உட்கார்ந்து பார்" என்றார். நான் அந்த பாயை எனது அறையின் ஒரு
மூலையில் வைத்துவிட்டு மறந்துவிட்டேன்.
சில மாதங்கள் கழித்து எனது உறவினர் ஒருவருடன் அம்மாவைப் பற்றிப் பேசிக்
கொண்டிருந்த்போது மிகவும் பாரமாக உணர ஆரம்பித்தேன். எனது அறையில்
நுழைந்தேன், எதேச்சையாக அப்போது அந்தப் பாயைப் பார்த்தேன். எப்படி
இவ்வளவு நாள் இதை மறந்துபோனோம் என நினைத்தேன்.
முதல் முறையாக அதில் அமர்ந்தவுடனேயே நான் அழ ஆரம்பித்தேன். 'எனது
பாவங்களை மன்னியுங்கள் அல்லா' என்று வேண்டினேன். இது 2012-ஆம் ஆண்டு
நடந்தது. குரானை படிக்க ஆரம்பித்தேன். அது என்னை சீக்கிரத்தில்
ஆட்கொண்டது. இஸ்லாமை பின்பற்றி, தொழுகை செய்வதைக் கற்றுக் கொண்டேன்.
ஜனவரி 2014-ல் மதமாறுவதைப் பற்றி உறுதியாக முடிவு செய்தேன்.
படங்களில் யுவன் ஷங்கர் ராஜா என்ற பெயரையே பயன்படுத்துவதால் இதுவரை
அதிகாரப்பூர்வமாக எனது பாஸ்போர்ட் மற்றும் இதர கோப்புகளில் நான் எனது
பெயரை மாற்றவில்லை. ஆனால் சில காலம் கழித்து அதைச் செய்வேன். இதைப் பற்றி
எனது அப்பாவிற்குதான் நான் கடைசியாக தெரிவித்தேன். "நான் குரானை படிக்க
ஆரம்பித்துள்ளேன். அது எனக்கு மன அமைதியைத் தருகிறது" என்றேன். அவர்,
"யுவன், நீ இஸ்லாமியனாக மாறுவதில் எனக்கு உடன்பாடில்லை" என்றார். ஆனால்
எனது சகோதரரும் அவர் மனைவியும் எனக்கு ஆதரவளித்துள்ளனர்.
இது விசித்திரமாக இருக்கலாம். ஆனால் என் அம்மாவே என் கையைப் பிடித்துக்
கொண்டு, "யுவன், நீ தனியாக இருக்கிறாய்.. இஸ்லாம் என்ற மரத்தின் கீழ் நீ
நிற்க வேண்டும் என நான் விரும்புகிறேன்" என அவர் சொல்வதாக எனக்குப் பல
முறை தோன்றியுள்ளது." என்று கூறியுள்ளார்.
Thanks:தி இந்து
10 August 2014
களுத்துறையில் ‘மில்பர் கபூர் மன்றம்’ உதயம்
களுத்துறை மாவட்ட முஸ்லிம்களின் கல்வி, சுகாதாரம் மற்றும் விளையாட்டு ஆகிய துறைகளை மேம்படுத்துவதை நோக்காகக் கொண்டு ‘மில்பர் கபூர் மன்றம்’ ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.
கல்வி, சுகாதாரம் மற்றும் விளையாட்டு ஆகிய துறைகளில் களுத்துறை மாவட்ட முஸ்லிம்கள் பலவிதமான தேவைகளுக்கும், குறைபாடுகளுக்கும் நீண்டகாலமாக முகம் கொடுத்து வருகின்றனர். அவற்றை முழுமையாக நிறைவேற்றி வைப்பதில் போதிய கவனம் செலுத்தப்படாத நிலைமை நீடித்து வருகின்றது. இந்நிலைமையைக் கருத்தில் கொண்டு தான் இம்மன்றத்தை ஸ்தாபித்து இருப்பதாக அதன் ஸ்தாபகரும், தலைவரும், பேருவளை நகர சபைத் தலைவருமான மில்பர் கபூர் இன்று ( 10 ஆம் திகதி ) தெரிவித்தார்.
கல்வி, சுகாதாரம் மற்றும் விளையாட்டு ஆகிய துறைகளில் இம்மாவட்ட முஸ்லிம்களைத் தேசிய மட்டத்தில் முன்னணியில் பிரகாசிக்கக் கூடியவர்களாகக் கட்டியெழுப்புவதும், எவரிலும் தங்கியிராது சுயமாக முன்னேற்றமடைந்தவர்களாக அவர்களை மேம்படுத்துவதும் இம்மன்றத்தின் பிரதான நோக்கம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
களுத்துறை மாவட்ட முஸ்லிம்களின் கல்வி, சுகாதாரம் மற்றும் விளையாட்டு ஆகிய துறைகளின் மேம்பாட்டைப் பிரதான நோக்காகக் கொண்டு ஸ்தாபிக்கப்பட்டுள்ள இந்த மில்பர் கபூர் மன்றம் தொடர்பாக ஊடகங்களுக்குத் தெளிவுபடுத்தும் செய்தியாளர் மாநாடு பெந்தொட்ட பீச் ஹோட்டலில் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இச்செய்தியாளர் மாநாட்டில் தலைமை தாங்கி உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இச்செய்தியாளர் மாநாட்டில் அவர் தொடர்ந்தும் உரையாற்றும்போது குறிப்பிட்டதாவது. களுத்துறை மாவட்டம் மிகவும் பெரியதொரு நிலப்பரப்பைக் கொண்ட பிரதேசம். இங்கு களுத்துறை, பேருவளை, மக்கோன, தர்காநகர், பாணந்துறை, அட்டுலுகம, வெலிப்பன்ன, வியங்கல்ல உள்ளிட்ட பல பிரதேசங்களில் முஸ்லிம்கள் வாழ்ந்து வருகின்றனர். இருப்பினும் இம்மாவட்ட முஸ்லிம்கள் கல்வி, சுகாதாரம் மற்றும் விளையாட்டு ஆகிய துறைகளில் பல குறைபாடுகளுக்கும் தேவைகளுக்கும் முகம் கொடுத்தவர்;களாக இருக்கின்றனர். அவற்றை முழுமையாக நிறைவேற்றி வைப்பதில் அதிக கவனம் செலுத்தப்படாத நிலமை நீண்ட காலமாக தொடர்கின்றது.
அவ்வெற்றிடத்தை நிரப்பி களுத்துறை மாவட்ட முஸ்லிம்களை கல்வி, சுகாதாரம் மற்றும் விளையாட்டு ஆகிய துறைகளில் மேம்படுத்துவதை பிரதான இலக்காகக் கொண்டு தான் இம்மன்றம் அமைக்கப்பட்டு இருக்கின்றது இதன் மூலம் எதுவித சுயலாபத்தையும் நான் எதிர்பார்க்கவில்லை. இந்த அமைப்பின் ஊடாக நாம் முன்னெடுக்கவிருக்கும் சகல மேம்பாட்டுத் திட்டங்களுக்கும் தேவையான நிதி உள்ளிட்ட உதவி ஒத்துழைப்புக்கள் சமூக நலன்விரும்பிகள், தனவந்தர்கள், கொடைவள்ளல்கள் போன்றோர் மூலமே பெற்றுக் கொள்ளப்படுகின்றது.
இந்த வகையில் எமது மன்றத்தின் முதலாவது வேலைத்திட்டமாக களுத்துறை மாவட்டத்திலுள்ள சகல கால்பந்து விளையாட்டுக் கழகங்களையும் அழைத்து, அச்சங்கங்களின் மேம்பாடு குறித்து கலந்துரையாடினோம். இக்கலந்துரையாடலில் இம்மாவட்டத்திலுள்ள 32 கால்பந்து விளையாட்டுக் கழகங்கள் பங்குபற்றின. இவ்வளவு தொகைக் கால்பந்து விளையாட்டுச் சங்கங்கள் வேறு மாவட்டங்களில் இருக்குமென நான் நினைக்கவில்லை. அதனால் எமது மாவட்ட விளையாட்டுக் கழகங்களை அபிவிருத்தி செய்வதை முக்கிய பணிகளில் ஒன்றாக நாம் கருதுகின்றோம்.
இக்கலந்துரையாடலின் போது அக்கழகங்களின் பிரதிநிதிகள் தமது தேவைகளையும், குறைபாடுகளையும் எமது கவனத்திற்குக் கொண்டு வந்தனர். அதன் அடிப்படையில் இம்மாவட்டத்தில் முன்னணியில் திகழும் ‘சுப்பர் சன் கால் பந்து விளையாட்டுக் கழகத்தை’ மேம்படுத்துவதற்காக 10 இலட்சம் ரூபாவை அன்பளிப்பாக வழங்கினேன். அத்தோடு இக்கலந்துரையாடலில் பங்கு பற்றிய ஏனைய விளையாட்டுக் கழகங்களுக்கு ஜேஸிகள், பந்து உள்ளிட்ட ஏனைய அடிப்படை உதவிகளும் வழங்கப்படவுள்ளன.
மேலும் இவ்விளையாட்டுக் கழகங்களின் விளையாட்டு வீரர்களது ஆரோக்கியம் குறித்து விளையாட்டுத் துறை மருத்துவ நிபுணர்களைக் கொண்டு வந்து விசேட மருத்துவ முகாம்களை நடாத்துவதற்கும் நாம் தீர்மானித்திருக்கிறோம். அத்தோடு மாவட்டத்தில் உள்ள சிறிய விளையாட்டு மைதானங்களை எமது மன்றத்தின் ஊடாக அபிவிருத்தி செய்வதற்கும் உத்தேசித்துள்ளோம்.
இதேவேளை இம்மாவட்டத்திலுள்ள 32 விளையாட்டுக் கழகங்களையும் உள்ளடக்கி இவ்வருட முடிவுக்குள் மாபெரும் சமாதான கால்பந்து விளையாட்டுப் போட்டி ஒன்றையும் இம்மாவட்டத்தில் நடாத்தவதற்கு தீர்மானித்துள்ளோம். இதில் வெற்றி பெறும் அணிக்கு பெறுமதியான பரிசில்கள் வழங்கப்படும். அதேநேரம் விளையாட்டுத்துறையில் ஈடுபட்டுள்ள, ஆனால் எதுவித தொழில் வாய்ப்பும் அற்ற விளையாட்டு வீரர்களுக்கு தனியார் நிறுவனங்களில் பகுதி நேர தொழில் வாய்ப்புக்களையாவது பெற்றுக் கொடுக்கவும் உத்தேசித்துள்ளோம்.
இவ்வாறு இம்மாவட்ட விளையாட்டுத்துறை மேம்பாட்டுக்காக உதவி ஒத்துழைப்புக்களை நல்குகின்ற நாம் விளையாட்டு வீரர்களில் இருந்தும் சில சேவைகளை எதிர்பார்க்கின்றோம். குறிப்பாக இரத்ததான முகாம்களை நடாத்துதல், அனர்த்தங்களின் போது அவசர உதவிகளுக்கான ஒத்துழைப்புக்களை நல்குதல் அவற்றில் குறிப்பிடத்தக்கவை. விளையாட்டுத்துறை மேம்பாட்டுக்காக நாம் அளிக்கின்ற உதவி ஒத்துழைப்புக்கள் மூலம் தேசிய மட்டத்தில் எமது வீரர்களை பிரகாசிக்கச் செய்ய வேண்டும் என்றே நாம் எதிர்பார்க்கின்றோம்.
மேலும், பாடசாலைக் கல்வியை நிறைவு செய்துள்ள இளம் யுவதிகளுக்கு முன்பள்ளி கற்கை நெறியை எமது மன்றத்தின் அனுசரணையோடு நடாத்துவதற்கும் நாம் எதிர்பார்த்துள்ளோம். அத்தோடு சமையல் கலை, தையல் பயிற்சி, சிறுவர் உளவள மேம்பாடு ஆகிய துறைகளிலும் பயிற்சிகளை அளிப்பதற்கும் தீர்மானித்துள்ளோம்.
இதேநேரம் இம்மாவட்டத்திலுள்ள முஸ்லிம் பாடசாலைகளின் குறைபாடுகளையும் தேவைகளையும் இனம் காண்பதையும,; வறிய மாணவர்களை அடையாளம் கண்டு அவர்களின் கல்விக்கு உதவி ஒத்துழைப்புக்களை நல்குவதையும் நோக்காகக் கொண்டு மாவட்டத்திலுள்ள முஸ்லிம் பாடசாலைகளின் அதிபர்களை எமது மன்றம் அடுத்த இரு வாரங்களுக்குள் சந்தித்து கலந்துரையாடவுள்ளது. அக்கலந்துரையாடலின் அடிப்படையில் வறிய மாணவர்களின் கல்வி மேம்பாட்டுக்கான புலமைப் பரிசில் திட்டம் அறிவிக்கப்படும்.
அதேநேரம் ஐந்தாம் தர புலமைப் பரிசில் பரீட்சை, க. பொ. த. சாதாரண தர / உயர் தர பரீட்சைகளுக்குத் தயாராகும் மாணவர்களுக்கென முன்னணி ஆசிரியர்களைக் கொண்டு விசேட கருத்தரங்குகளை நடாத்தவும் திட்டமிட்டுள்ளோம். இம்மாவட்டத்தின் கல்வி மேம்பாட்டுக்கான சகல நடவடிக்கைகளும் பாடசாலை அதிபர்கள் வழங்கும் யோசனைகளுக்கு அமையவே முன்னெடுக்கப்படும்.
மேலும் இம்மாவட்ட மக்களின் ஆரோக்கிய மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் இலவசக் கிளினிக்குகள், விழிப்புணர்வு கருத்தரங்குகள், நடமாடும் மருத்துவ முகாம்கள் என்பன நடாத்தப்படும். பாடசாலை மட்டத்திலும் இம்முகாம்களை நடாத்துவதற்கு உத்தேசித்துள்ளோம். நாம் முன்னெடுக்கும் இந்த அனைத்துச் சேவைகள் மூலமும் எமது மாவட்ட முஸ்லிம் சமூகத்தில் முன்னேற்றத்தை ஏற்படுத்தவே விரும்புகின்றோம்.
இது ஒரு பாரிய வேலைத்திட்டம். எமது சமூகத்தின் மேம்பாட்டையும் முன்னேற்றத்தையும் அடிப்படை இலக்காகக் கொண்டு தான் நாம் இதனை முன்னெடுக்கின்றோம். எம்மால் மாத்திரம் இப்பணியில் முழுமையான வெற்றியை அடைய முடியாது. ஆகவே இவ்வேலைத்திட்டங்கள் மூலம் உச்ச பலாபலன்களைப் அடைந்து கொள்வதற்காக எம் சமூக மேம்பாட்டில் ஆர்வமும் அக்கரையும் கொண்ட சகலரையும் எம்முடன் இணைந்து கொள்ளுமாறு நான் பகிரங்கமாக அழைப்பு விடுக்கின்றேன். எமது இவ்வேலைத்திட்டத்திற்குக் கால எல்லை குறிக்கப்பட்டிருக்கிறது. இக்கால எல்லைக்குள் எமது வேலைத்திட்டங்களின் பிரதிபலனாக சமூகத்தில் முன்னேற்றங்கள் ஏற்படுமாயின், இவ்வேலைத் திட்டங்கள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும். அத்தோடு ஏனைய மாவட்டங்களுக்கும் எமது மன்றத்தின் சேவைகள் விஸ்தரிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
Thanks: sonakar .com
05 August 2014
மார்ச்சுவரிகள் நிரம்பின: பிஞ்சுக்குழந்தைகளின் உடல்கள்ஃப்ரீசரில்!
காஸ்ஸா: மார்ச்சுவரிகள்(இறந்த உடல்களை பாதுகாக்கும் கிடங்குகள்)
நிரம்பிவிட்டதால் இறந்தஉடல்களைபாதுகாக்க வேறு வழிமுறைகளை காஸ்ஸா
மருத்துவக்குழுவினர் ஆராய்ந்து வருகின்றனர். இஸ்ரேல்ராணுவத்தின்
தாக்குதலில் சேதமடையாத கட்டிடங்கள், வாகனங்களில் குளிரூட்டும் முறைகளை
கையாண்டு அவற்றில் இறந்தஉடல்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. ஐஸ்க்ரீமை
குளிர்விக்க பயன்படும் பெரிய ஐஸ்பெட்டிகளில் பிஞ்சுக் குழந்தைகளின்
உடல்கள் பாதுகாக்கப்படுகின்றன. வயதானவர்களின் உடல்கள் காய்கறிகள், இதர
சாதனங்கள் பாதுகாக்கப்படும் அறைகள் மற்றும் வாகனங்களில்
பாதுகாக்கப்படுகின்றன. ரஃபாவில் உள்ள மருத்துவமனைகளில் மார்ச்சுவரிகள்
நிரம்பிவிட்டதால் இத்தகையதொரு முயற்சிக்கு மருத்துவக் குழுவினர்
தயாராகினர். நேற்று முன் தினம்இஸ்ரேலின் கொடூர தாக்குதலில் கொல்லப்பட்ட
அல்-கோல் குடும்பத்தைச்சார்ந்த பிஞ்சுக் குழந்தைகளின் உடல்கள் ஐஸ்
பெட்டிகளில் பாதுகாக்கப்படுகின்றன. அதேவேளையில் காஸ்ஸாவில் உள்ளமருத்துவ
சேவை மையங்கள் ஆபத்தில் இருப்பதாக ஐ.நா எச்சரிக்கை விடுத்துள்ளது.
பெரும்பாலான மருத்துவமனைகள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருவதால்
பணியாளர்கள் வரவும் இயலவில்லை. கப்ருஸ்தானங்களில் கூட இஸ்ரேல் தாக்குதலை
தொடர்வதால் மார்ச்சுவரிகளில் இறந்தஉடல்களை பாதுகாக்கும் நிர்பந்தம்
ஏற்பட்டுள்ளது.
Thanks:Popular Front of India
நிரம்பிவிட்டதால் இறந்தஉடல்களைபாதுகாக்க வேறு வழிமுறைகளை காஸ்ஸா
மருத்துவக்குழுவினர் ஆராய்ந்து வருகின்றனர். இஸ்ரேல்ராணுவத்தின்
தாக்குதலில் சேதமடையாத கட்டிடங்கள், வாகனங்களில் குளிரூட்டும் முறைகளை
கையாண்டு அவற்றில் இறந்தஉடல்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. ஐஸ்க்ரீமை
குளிர்விக்க பயன்படும் பெரிய ஐஸ்பெட்டிகளில் பிஞ்சுக் குழந்தைகளின்
உடல்கள் பாதுகாக்கப்படுகின்றன. வயதானவர்களின் உடல்கள் காய்கறிகள், இதர
சாதனங்கள் பாதுகாக்கப்படும் அறைகள் மற்றும் வாகனங்களில்
பாதுகாக்கப்படுகின்றன. ரஃபாவில் உள்ள மருத்துவமனைகளில் மார்ச்சுவரிகள்
நிரம்பிவிட்டதால் இத்தகையதொரு முயற்சிக்கு மருத்துவக் குழுவினர்
தயாராகினர். நேற்று முன் தினம்இஸ்ரேலின் கொடூர தாக்குதலில் கொல்லப்பட்ட
அல்-கோல் குடும்பத்தைச்சார்ந்த பிஞ்சுக் குழந்தைகளின் உடல்கள் ஐஸ்
பெட்டிகளில் பாதுகாக்கப்படுகின்றன. அதேவேளையில் காஸ்ஸாவில் உள்ளமருத்துவ
சேவை மையங்கள் ஆபத்தில் இருப்பதாக ஐ.நா எச்சரிக்கை விடுத்துள்ளது.
பெரும்பாலான மருத்துவமனைகள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருவதால்
பணியாளர்கள் வரவும் இயலவில்லை. கப்ருஸ்தானங்களில் கூட இஸ்ரேல் தாக்குதலை
தொடர்வதால் மார்ச்சுவரிகளில் இறந்தஉடல்களை பாதுகாக்கும் நிர்பந்தம்
ஏற்பட்டுள்ளது.
Thanks:Popular Front of India
04 August 2014
காஸா களத்தில், கலிமாவுடன் ஷஹீத்தாகும் ஊடகவியலாளர் (video)
இந்த வீடியோவை எடுத்தஅல் அக்ஸா டீவி கேமரா மேன்ஸாமிஹ்அல் உர்யான்
தாக்குதலில் அகப்பட்டு கலிமா மொழிந்தபடி நீதிக்கான பாதையில்
உயிர்நீக்கும் காட்சி....! மீடியாவிற்கான பணிகள் ஒரு போரட்டவியல்
(ஜிஹாத்) இஸ்லாம் ஒன்லைனை ஆரம்பித்த போது ஷெய்க் கர்ளாவி அவர்கள்
சொன்னார்கள்'ஊடகப் பணிதான் நவீனகாலத்தின் ஜிஹாத் .அவர் கூற்றை உண்மைக்காக
போராடும் மீடியாக்களும் பத்திரிக்கையாளர்களும் உண்மைப் படுத்திக்
கொண்டிருக்கின்றனர்!
https://www.youtube.com/watch?v=0rAaKKzp5nM#
t=275
நன்றி:ஜப்னா முஸ்லிம
தாக்குதலில் அகப்பட்டு கலிமா மொழிந்தபடி நீதிக்கான பாதையில்
உயிர்நீக்கும் காட்சி....! மீடியாவிற்கான பணிகள் ஒரு போரட்டவியல்
(ஜிஹாத்) இஸ்லாம் ஒன்லைனை ஆரம்பித்த போது ஷெய்க் கர்ளாவி அவர்கள்
சொன்னார்கள்'ஊடகப் பணிதான் நவீனகாலத்தின் ஜிஹாத் .அவர் கூற்றை உண்மைக்காக
போராடும் மீடியாக்களும் பத்திரிக்கையாளர்களும் உண்மைப் படுத்திக்
கொண்டிருக்கின்றனர்!
https://www.youtube.com/watch?v=0rAaKKzp5nM#
t=275
நன்றி:ஜப்னா முஸ்லிம
03 August 2014
இஸ்ரேலியயூத தீவிரவாதிகளால் அழிந்து வரும் காசா

இந்தகற்துண்டுகளைத் தவிர இந்த பாலஸ்தீன தேசத்தில் எதுவும் மீதமில்லை' ஜூலை எட்டாம் திகதியிலிருந்து பிணக் காடாக மாறி இருக்கும் காசா பிரதேசத்தில் சுவாசிப்பதற்காக வழங்கப்பட்ட பனிரெண்டு மணி நேரயுத்த நிறுத்தத்தில் காற்றிலே காணாமல் போயுள்ள தனது வீட்டு அழிவுகளுக்குள் நின்று புலம்புகிறார் உம்மு அஹ்மத் எனும் பாலஸ்தீன தாய் .
இறந்த சஹீதுகளின் உடலங்களை அடக்கம் செய்வது கூட அங்கு பெரும் சிரமமாக உள்ள சூழலில் இந்த திணிக்கப்பட்ட மனிதப் படுகொலைகளின் பின்னணியில் உள்ள சதி தனது காய்களை லாவகமாக நகர்த்தத் தொடக்கி விட்டுள்ளது.
காணமல் போன மூன்று இஸ்ரேலிய இளைஞர்கள் இறந்த நிலையில் மீட்கப்பட்ட போது இந்த கொலைகளை ஹமாஸ் இயக்கம் தான் செய்தது! என குற்றம் சாட்டியதுடன் இந்த இளைஞர்கள் எவ்வாறு இறந்து போனார்கள் எனும் மரணப் பரிசோதனை கூடசெய்யாமல் உடனடியாகவே தனது வான் வழித்தாக்குதலை இஸ்ரேல் ஆரம்பித்தது. இந்த இளைஞர்கள் கடலில் குளித்துக் கொண்டிருந்ததும், பின்னர் அதே கடற்கரையில் பிணமாக கிடப்பதும் போன்ற வீடியோ கட்சிகள் கிடைத்தும் கூட அதனை அப்படியே இருட்டடிப்புச் செய்துவிட்டு தனது கோரக் கொலைகளை இஸ்ரேல் தொடர்கிறது. இந்த திணிக்கப்பட்ட யுத்தத்தின் பின்னணியில் பாரிய சதி பின்னப் பட்டிருப்பது தற்போது வெளிவரத் தொடங்கியுள்ளது, இது இந்த இனப் படு கொலைகளை விட பாலஸ்தீன மக்களுக்கும் இஸ்லாமிய உணர்வுள்ள எந்த முஸ்லிமுக்கும் மிகக் கொடூரமானது.
இந்தப் பின்னணி என்ன என்பதை சற்று நோக்குவோம். எகிப்தில் முஸ்லிம் சகோதரத்துவ இயக்கத்தின் ஜனநாயக வெற்றியை அநியாயமான சதி மூலம் கைப் பற்றிய சீசி எனும் இராணுவத் தளபதி அமெரிக்க சவு+தி அரேபிய மற்றும் இஸ்ரேலிய விசுவாசி ஆவார் இவரைப் பயன்படுத்தி எதிர்காலத்தில் தமது மன்னர் ஆட்சிக்கு சவாலாக வரக் கூடிய ஜனநாயக வழியில் அமைந்த ஆட்சி தனது அண்;மித்த தேசமான எகிப்தில் ஆட்சிக் கதிரையில் அமர்வதை சவு+தி அரசு கிஞ்சித்தும் விரும்பவில்லை. இதற்காக அமெரிக்கமற்றும் இஸ்ரேல் ஒத்துழைப்புடன் எகிப்திய ஜனநாயக அரசினை தனது ஏnஜண்டுகளைப் பயன்படுத்தி வீழ்த்தியது நாம் அறிந்ததே. அது அத்தோடு நின்று விடாமல் இஸ்லாமிய சகோதரத்துவ இயக்கத்தின் செல்வாக்குமிக்க அறிஞர்களையும் தலைவர்களை யும் தேச விரோத குற்றச்சாடுகளுக்கு உற்படுத்திக் கொன்று குவித்தது. இதனை ஏன் இங்கு நான் குறிப்பிடுகின்றேன் என்றால் எகிப்தில் வீழ்த்தப்பட்ட முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பின் சகோதர இயக்கம்தான் தற்போது பலஸ்தீனமக்களின் பெரும்பான்மை ஆதரவோடு ஆட்சியில் இருக்கும் ஹமாஸ் இயக்கமாகும்.
வெளிப்படையாக பெரும் மக்கள் ஆதரவோடு அதிகாரத்தில் இருக்கும் இந்த ஹமாஸ் இயக்கமானது உயிர் வாழுமானால்; கழுத்து நெரிக்கப் பட்டுள்ள எகிப்திய சகோதரத்துவ இயக்கத்துக்கு புத்துயிர் அளிக்கக் கூடும் என்பதோடு எதிர்கால அமெரிக்க, சவு+தி மற்றும் எகிப்;திய கூட்டு நலன்களுக்கும் சவாலாக அமைவதோடு இஸ்ரேலுக்கும் அச்சுறுத்தலாக அமையும் என்பதை இந்நான்கு சதிகாரர்களும் சரியாக கணிப்பிட்டுள்ளனர்.
எனவே மக்களின் பெரும் ஆதரவோடு ஆட்சியிலிருக்கும் ஹமாஸ் இயக்கத்தை நிராயுதபாணிகளாக்கி மக்களின் படுகொலைகளுக்கான சு+த்திரதாரிகளாக கட்டமைப்பு செய்து மக்களை விட்டும் தூரப்படுத்தி நசுக்கிவிடுவதே இந்த சதிவலையின் நோக்கமாகும். ஆனால் இன்று எகிப்தில் முர்ஸி அவர்களின் ஆட்சி இருந்திருந்தால் இஸ்ரேல் இந்த வெறியாட்டத்தை ஆரம்பித்தே இருக்காது.
இந்த சு+ழ்ச்சியின் அடுத்தகட்ட நகர்விற்கு இப்போது இந்த நாசகார சக்தியினர் மிக சாதுர்யமாக காய் நகர்த்தியு ள்ளனர். பாலஸ்தீன மக்களின் மீது கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள காட்டுத்தனமான கொலைகள் அரங்கேறி சரியாக ஒரு வாரத்தின் பின்னர் எகிப்;திய அரசு ஒரு தீர்வுத் திட்டத்தை முன்வைத்தது. நிபந்தனையுடனான யுத்த நிறுத்தமொன்றை அறிவிப்பு செய்து ஹமாஸ் இயக்கத்தின் கனரக ஆயதங்களையும் ராக்கெட்டுகளையும் மூன்றாம் தரப்பினரிடம் ஒப்படைப்பதும் மற்றும் அவர்களின் கட்டுப் பாட்டிலுள்ள சுரங்க வாயில்களை அழித்து விடுவதும் இதன் பின்னர் பாலஸ்தீனத்தில் சர்வதேச பிரசன்னத்தோடு கூடிய மீள்கட்டுமானத்தை செய்வதும் என்கின்ற இஸ்ரேலுக்கு மிகவும் சாதகமான முன்மொழிவுகளை தந்திரோபாயமாக முன்வைத்தது.
இந்த முன்மொழிவுகளை ஏற்றுக் கொண்டாலும் நிராகரித்தாலும் மீளமுடியாத பாதிப்புக்கு ஹமாஸ் இயக்கமும் பாலஸ்தீன மக்களும் உற்பட்டே ஆகுவார்கள் என்பது சிறு பிள்ளைக்கு கூட விளங்கும். ஏனெனில் இதனை ஒத்துக்கொள்ளும் போது ஹமாஸ் இயக்கத்தினர் நிராயுதபாணிகள் ஆவதோடு அவர்களது இதுகாலவரையான யுத்த தந்திரோபாய நிலைகளாகக் கருதப்படும் சுரங்கப் பாதைகள் அழிக்கப்படும். அதன் பின்னர் அவர்கள் செத்தபாம்பிற்கு சமம்.
இந்த முன்மொழிவுகளை அவர்கள் நிராகரிக்கின்ற போது இந்த திணிக்கப்பட்ட யுத்தத்திற்கும் பாலஸ்தீன மக்களின் அழிவிற்கும் காரண கர்த்தாக்களாக உலக அரங்கில் சித்திரிக்கப்பட்டு இஸ்ரேலின் மனிதப்படுகொலைகளை இஸ்ரேலின் பாது காப்பிற்கான நடவடிக்கையாக நியாயப்படுத்த முடியும். இந்த அநீதியான உடன்படிக்கைகளை ஹமாஸ் இயக்கம் இதிலுள்ள சு+ழ்ச்சிகளைப் புரிந்து கொண்டு நிராகரித்தது இதனால் அவர்களது இரண்டாவது தந்திரோபாயத்தை நோக்கி இப்போது நகர்ந்துள்ளனர்.
இதற்கான இன்னுமொருபக்க ஆதாரம்தான் இந்த யுத்த நிறுத்த செயற்பாட்டில் துருக்கியின் எந்தபங்களிப்பையும் இஸ்ரேல் சவு+தி எகிப்து மற்றும் அமெரிக்க கூட்டாளிகள் விரும்பவில்லை, இன்னுமொருபடி மேலாக சென்று மேற்குக் கரையின் ஜனாதிபதியான மஹ்மூத் அப்பசினையும் தூண்டி விட்டு அவரும் இந்த எகிப்திய ஆலோசனைகளை முன்னெடுக்குமாறும் இதற்கு தான் பங்களிப்பு செய்ய முடியும் எனவும் கூற வைத்துள்ளனர். ஏனெனில் பாலஸ்தீன மக்களின் சமாதான வாழ்விற்கு மஹ்மூத் அப்பாஸ் போன்ற நடுநிலையாளர்கள், (உண்மையில் சியோனிச சதிவலைக்குள் இலகுவில் மாட்டிவிடக் கூடிய அடிவருடிகள்) தான் மிகப் பொருத்தம் என்ற தோற்றப்பாட்டை நிறுவி காசா மக்களையும் அப்பாசின் தலைமைத்துவத்துக்குள் கொண்டுவருவதற்கான சதிமுயற்சியையும் முடுக்கிவிட்டுள்ளனர்.
இஸ்ரேலிய தரப்பு தற்போது முன்வைத்துவரும் நிபந்தனைகள் இதற்கு தகுந்த ஆதாரமாக உள்ளன அப்டெல் மொபாஸ் என்கிற இஸ்ரேலிய இராஜ தந்திரி அண்மையில் வெளியிட்ட பத்திரிகை செய்திகள் இதனை நமக்கு உணர்த்துகின்றன.
அவர் குறிப்பிடும் போது ~பலஸ்தீன மக்களின் சாவுக்கும் பேரழிவுக்கும் ஹமாஸ் இயக்கமே காரணமாகும்”.
பாலஸ்தீன மக்கள் ஹமாஸ் இயக்கத்தை விட்டு தூரமாக்கப்பட்டால் இவர்களின் மறுவாழ்விற்கும் அபிவிருத்திக்கும் முழு ஒத்துழைப்பையும் வழங்க சவு+தி அரசும் ஐக்கிய அரபு இராச்சியமும் தயாராக உள்ளன' என சுட்டிக் காட்டுகிறார். சவு+தி அரசு சார்பாக கருத்துத் தெரிவுக்கும் அளவிற்கு இந்த உறவு உள்ளது என்றால் இந்த அரசுகளோடு எந்த அளவில் இஸ்ரேல் தொடர்புடனுள்ளது என்பதனை உணர்ந்து கொள்ள முடியும்.
இன்னொருபுறம் ஹமாஸ் இயக்கத்தை பயங்கரவாத இயக்கமாக சித்திரிக்கும் பணியில் மேற்கத்தேய மற்றும் சவு+திய அடிவருடிகள் மற்றும் அவர்கள் சார்ந்த ஊடகங்களும் காட்டிவரும் முனைப்பும் இதனை நமக்கு நன்கு உணர்த்துகின்றன. இந்தப் பணிக்காக இஸ்ரேலிய பல்கலைக்கழகங்களில் யுத்த அறைகள் (றுயச சுழழஅள) எனும் தனிப் பிரிவுகள் அமைக்கப்பட்டு பல்கலைக்கழக மாணவர்கள் இரவுபகலாக பணியாற்றிக் கொண்டிருக்கின்றனர்.
இதற்காக இவர்கள் தட்டச்சு செய்யும் ஒவ்வொரு வார்த்தைகளுக்கும் எட்டு இஸ்ரேலிய நாணயங்;கள் ஊதியமாக வழங்கப்படுகின்றன, நாற்பது மொழிகளில் அனைத்து சமூக ஊடகங்களிலும் மற்றும் வலைத்தளங்களிலும் வரும் பாலஸ்தீன ஆதரவு செய்திகளுக்கு மறுப்புகளை எழுதுவதோடு, முஸ்லிம் பெயர்களில் பல காட்டுரைகளையும் கருத்துரைகளையும் எழுதுவதுடன் ஹமாஸ் என்பது முஸ்லிம் விரோத பயங்கரவாத இயக்கம் என்பதனை வலியுறுத்தி அதற்கான போலியான நியாயங்களை சித்திரித்து முஸ்லிம் மக்களுக்கு மத்தியில் பரப்புவதே இவர்களுக்கான பணி இதனை சர்வதேச ஊடகங்களில் குறிப்பாக அல்nஜசீரா செய்திகளுக்கு வரும் கருத்துரைகளில் தெளிவாக காணமுடியும்.
எத்தனை பெரிய சதிகள் எவ்வளவு அரசியல் வஞ்சங்கள், பதவிகளைப் பாதுகாப்பதற்காக இஸ்லாத்தையும் அப்பாவி உயிர்களையும் பலிகொடுக்கும் முஸ்லிம் தேசங்களது தலைமைகள், இறைவனின் கட்டளைகளை மீறி அநியாயக் காரர்களுக்கு துணைபோகும் இவர்கள் இதே அக்கிரமக் காரர்களுக்கு தாமும் இரையாகிப் போவோம் என்பதை மறந்து விட்டார்கள் ஆனால் வரலாறு எனும் சக்கரம் இந்த பாடத்தை நமக்கு தெளிவாக போத்தித்துக் கொண்டே இருக்கிறது.
ஆயினும் இந்த அத்தனை சதிகளையும் புரிந்து கொண்டு மக்களின் பேராதரவோடு ஹமாஸ் போராடி வருகிறது, பாலஸ்தீனத்தில் அவர்களது அஸ்தமனம் இஸ்லாமிய சகோதரத்துவ இயக்கத்தின் உழைப்பின் பெரும் தியாகங்களின் அறுபது வருட போராட்டத்தின் முஸ்லிம் சமூக அரசியல் எழுச்சியின் நம்பிக்கைகளை மூர்ச்சையுறச் செய்யும். இதிலிருந்து விடுபட முஸ்லிம் சமுகத்திற்கு அல்லாஹ்வைத் தவிர வேறு என்ன முகாந்திரம் உள்ளது.
thanks:thinakaran





இரக்கமில்லா இனவெறியர்களின் நரமாமிச வேட்டை..
அனல் கக்கும் 90இன்
ஆகஸ்ட் 3
வருடம் தோறும்
வந்து செல்லும் !
சிரியாவின் சித்திரவதைகள்,
காஸாவின் கண்ணீர்க் கதறல்கள்,
ஈராக்கின் இரத்த வெள்ளம்
எம் இதயங்களைப்
பிழிந்தெடுத்தாலும்
ஆகஸ்ட் 3 மட்டும்
எம்மை அதிர வைத்துக்
கலக்கி வைக்கும் !
சுதந்திரத்தின் பெயரில்,
போராட்டம் என்று சொல்லி
கண்ணியக் காவியத்தைக்
களங்கப்படுத்தி
குமர் தாத்தாமார்களின்
முன்தானைப் புடவையிலும்
உம்மாமார்களின் முக்காட்டு முகட்டிலும்
ஈனச் செயல்கள் எழுதப்பட்டதை
ஆகஸ்ட் 3
எடுத்துச் சொல்லும் !
ஓந்தாச்சி மடத்தில் ஓங்கிஅலறிய
மஹ்ரூப் நானாவின்
அப்பாவி அலறல்கள்;;;;;;
கல்முனையின் காட்டுப்புறத்துக்கு,
விறகு சேர்க்கச் சென்ற
இப்றாஹீம் காக்காவின்
இறந்து போன பைசிக்கல் ;
உன்னிச்சையில்
கண்டதுண்டமாய்
வெட்டி வீசப்பட்ட
வயல் வேலை செய்த தம்பிமார் ;
பூநொச்சிமுனையில்
பூண்டோடு பிடுங்கப்பட்ட
மினாறாவின் அடித்தளங்கள் ;..
தாராபுரத்தில்.. தம்பலகாமத்தில்..
கிண்ணியாவில்..கீச்சான் பள்ளத்தில்
மூதூரில், முல்லைத்தீவில்
முஸ்லிம் என்பதற்காக
பால்மனம் மறக்காத பாலகர்கள்
குற்றம் தெரியாத குடுகுடு ஆச்சிமார்
போராட்டம் என்று
பெயர் போட்டுக் கொண்ட
பொறுக்கிப் பயல்களின்
வெறியாட்டங்களுக்கு
இரையாகிப் போனதை
இந்த ஆகஸ்ட் 3
மீண்டும் கிளறி
எம் சிந்தையைச் சீண்டி எடுக்கும் !
எம் வீட்டு அயலில்;,
எம் முற்றத்து ஒரங்களில்
சேர்ந்திருந்து
எம்மிடம் நீர் அருந்தி
எம்
உதவியோடு உண்டு வாழ்ந்தவர்கள்,
கெப்டன்கள் லெப்டினன்கள் என்று
ஒரு இரவில் பெயர் மாறி,
வளர்த்த கடா மார்பில் பாய்ந்த
கர்மக் கதையைக்
கறை படிய விட்டார்கள்
தமிழ் முஸ்லிம் உறவைக்
கறுப்பாக்கி விட்டார்கள் !
செல்வராசா மாஸ்டரும் சீனிக்
காக்காவும்
சித்திரா அக்காவும், சித்தி ராத்தாவும்
அமலன் அண்ணாவும், அஹ்சன்
தம்பியும்
நடராஜா நண்பனும், நிசார் மச்சானும்
ஒரே கூரையின் கீழ்
ஒன்றாய் இருந்து பெருநாள்
உண்டதை
வரலாற்றின் கனவாய்
வடித்து வைத்தார்கள் !
தீபாவளி நாட்களில்
சிவராத்திரி இரவுகளில்
பொங்கல் நாட்களில்
பொங்கிய பாசங்களைப்
பொசுக்கிய சோகத்தை
அதன் அகோரத்தை
ஆகஸ்ட் 3
அமைதியாய்ச் சொல்லும் !
மியான் குளத்தில்
மஹ்மூது சாச்சாவும்
அடுத்த புத்திஜீவிகளும்
இனவெறி கண்ணிவெடிக்குள்
கலைந்து போனதும்
என் சாச்சி பிள்ளைகள்
கலங்கி நின்றதும்
கண் முன்னே வரும் !
வயிற்றுப் பசியில்
பொட்டணி கட்டிச்சென்ற
பக்கத்து வீட்டு அச்சியின்
குழந்தைகள் -
காலாகாலமாய் கதறிய கதறல்கள்
காது நிறைய ஒலிக்கும்.
எமது -
ஹூஸைனியா மஸ்ஜிதின்
புறாக்கூட்டச் சிறார் கூட்டம் -
மஸ்ஜிதின் மூலை யெங்கும்
வெறி கொண்ட வேங்கை
எனும் கோழைகளால்
குதறப்பட்டு கொல்லப்பட்டதை
வெந்த புண்ணில் வேலாய்
குத்திக் காட்டும் !
ஸஜ்தா'விலும் ருக்கூ'விலுமாய்
கூனிக்குறுகியிருந்த கூன் பிறையின்
இறை நேசக்கூட்டம்
இரக்கமில்லா இனவெறியர்களின்
நரமாமிச வேட்டைக்குப்
பலியாகிப் போன சோக காவியத்தை
இந்த ஆகஸ்ட் 3
அன்று
மீண்டுமொரு ஆகஸ்ட் 3
வரக்கூடாதென்று சொல்லி நிற்கும்!
இனவெறி பேசி
இரத்த வெறியில்
ஏராளமான
அப்பாவி உயிர்களை
காவு கொண்ட
முள்ளிவாய்க்கால் வாசிகள்
பல ஆயிரம் தடவைகள்
நொறுக்கப்பட்டாலும்....
ஓந்தாச்சிமடத்தின்
ஓலங்களைப் பார்த்து
எம் ஊர்ப்பள்ளியில்
எம் உடன் பிறப்புக்கள்
இரத்த வெள்ளத்தில்
துடித்ததைப் பார்த்து
பட்டாசி கொழுத்தி
கைகொட்டிச் சிரித்த
கரிகாலன்கள்
காலா காலமாய்
கண்றாவியாய்
அழுந்திச் செத்தாலும்
எமதூர் மூலையில்
பொக்கை வாய்ப் புலம்பல்கள்
தொடர்ந்து கொண்டேயிருக்கும்.
கடத்தப்பட்ட மகனை
வெட்டப்பட்ட வாப்பாவை
அரியப்பட்ட ஆச்சியைப் பற்றி
பேசிக் கொண்டேயிருப்பர்
வரலாற்றில் வேர் பதித்த
தமிழ் முஸ்லிம் உறவை அழித்து
தன்தாய் தாலி அறுத்து
தமிழீழம் என்ற பெயரில்
வெறியுலகை விதைக்கப்பார்த்த
வெறியர்கள் அழிப்பட்டதை-
கொலையுலகு நிலைக்காது
சத்தியம் ஜெயிக்கும்
என்று
இந்த ஆகஸ்ட் 3
அடித்துக் சொல்லும்.
[கலாநிதி அலவி ஷரீப்தீன் ]
நன்றி:ஜப்னா முஸ்லிம்
01 August 2014
Stephanie Louise Kwolek– உயிர் காக்கும் செயற்கை இழையை உருவாக்கியவர்
நாம் ஒருவரின் உயிரைக் காப்பாற்றினோம்
என்பது நமக்கு மனமகிழ்ச்சியையும் மனநிறைவையும்
தரக்கூடியது, அதற்கு இணையாக வேறெதையும் ஒப்பிட
இயலாது. - ஸ்டெப்ஃபெனி கோலக் ஸ்டெப்ஃபெனி கோலக் (Stephanie Louise
Kwolek, ஜூலை 31, 1923 – ஜூன் 18, 2014) தனது கண்டுபிடிப்பின் மூலம்
பல்லாயிரக்கணக்கான மனித உயிர்களைக் காத்திருக்கிறார்.
என்பது நமக்கு மனமகிழ்ச்சியையும் மனநிறைவையும்
தரக்கூடியது, அதற்கு இணையாக வேறெதையும் ஒப்பிட
இயலாது. - ஸ்டெப்ஃபெனி கோலக் ஸ்டெப்ஃபெனி கோலக் (Stephanie Louise
Kwolek, ஜூலை 31, 1923 – ஜூன் 18, 2014) தனது கண்டுபிடிப்பின் மூலம்
பல்லாயிரக்கணக்கான மனித உயிர்களைக் காத்திருக்கிறார்.
Subscribe to:
Posts (Atom)