தங்களின் வருகைக்கு நன்றி

date

relojes web 08 Apr 2025

08 October 2013

3 பேருக்கு மருத்துவத்துக்கான நோபல் பரிசு

மருத்துவத்துக்கான நோபல் பரிசு பெறும்
உயிரியல் பேராசிரியர்கள்


மருத்துவதுறைக்கான நோபல் பரிசு, மனித
செல்கள்(கலங்கள்) குறித்த உரியியல்
ஆய்வுகளைச் செய்த
மூன்று பேராசிரியர்களுக்கு கூட்டாக
வழங்கப்படுகின்றது. இரசாயனங்களை உடலில் உள்ள செல்கள்
கொண்டு செல்லும் முறை குறித்த
இவர்களது ஆய்வுகளுக்காக இந்த
பரிசு அவர்களுக்கு வழங்கப்படுகின்றது. அமெரிக்கார்களான ஜேம்ஸ் றொத்மன்,
ராண்டி ஷெக்மன் மற்றும் ஜேர்மனியில் பிறந்த
தோமஸ் சுதோவ்
ஆகியோருக்கு இது வழங்கப்படுகிண்றது. நொதிமங்கள் மற்றும் ஹோர்மோன்கள் போன்ற மனித
செல்களினால் தயாரிக்கப்படும் மூலக்கூறுகள்,
வெசிக்கல்ஸ் என்ற சிறு பொதிகளாக உரிய
நேரத்தில் உரிய
இடத்துக்கு எவ்வாறு கொண்டுசெல்லப்படுகின்றன
என்பதை இவர்கள் கண்டுபிடித்திருக்கிறார்கள். நீரிழிவு மற்றும் மூளை
குறைபாடுகள் போன்ற
நோய்கள் குறித்த ஆய்வுகளுக்கு இந்த
கண்டுபிடிப்பு உதவும்
என்று நம்பப்படுகின்றது.


Source:BBC

No comments:

Post a Comment