தங்களின் வருகைக்கு நன்றி

date

relojes web 10 Apr 2025

27 November 2012

விண்ணுக்கு ஏவப்பட்டது இலங்கையின்முதலாவது செயற்கைக்கோள்

இலங்கையின்
முதலாவது தொலைத்தொடர்பு செயற்கைக்கோளான
(செற்றலைட்) 'சுப்றீம்செற்',
இன்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் 3.43
மணிக்கு விண்ணுக்கு வெற்றிகரமாக ஏவப்படது.
சீனாவின் சீசாங் செயற்கைக்கோள் ஏவுதளத்திலிருந்தே இந்த செயற்கைக்கோள்
ஏவப்பட்டதாக சுப்றீம்செட் நிறுவனம்
அறிவித்தது.
சுமார் 360 மில்லியன் அமெரிக்க டொலர்கள்
செலவில் உருவாக்கப்பட்டுள்ள இச் செயற்கைக்கோள், எதிர்வரும் 2013ஆம் ஆண்டு ஜுன்
மாதத்திற்குப் பின்னர் வர்த்தக
நடவடிக்கைகளுக்காகப்
பயன்படுத்தப்படவுள்ளது.
மேற்படி இச் செயற்கைக்கோள் கடந்த 22ஆம்
திகதி விண்ணுக்கு ஏவப்படவிருந்த நிலையில் சீரற்ற காலநிலையால் 5 நாட்கள்
தாமதமாகி இன்று விண்ணுக்கு ஏவப்பட்டுள்ளது.
இதேவேளை, இந்த
செயற்கைக்கோளை கட்டுப்படுத்துவதற்கான
நிலையம் கண்டியில் அமைக்கப்படவுள்ளது.
வரலாற்றில் உலகில் சொந்தமாக தொலைத்தொடர்பு செயற்கைக்கோளை வைத்திருக்கு
ம் 45ஆவது நாடாக
இலங்கை இடம்பிடித்துள்ளதுடன்
தெற்காசியாவிலேயே இந்தியா,
பாகிஸ்தானுக்கு அடுத்தபடியாக சொந்தமாக
தொலைத்தொடர்பு செயற்கைக்கோளை வைத்துள்ள மூன்றாவது நாடு என்ற பெருமையையும்
இலங்கை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment