தங்களின் வருகைக்கு நன்றி

date

relojes web 11 Apr 2025

20 September 2011

ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் மூவர் முதலிடம்

ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் அனுராதபுரமாவட்டத்தைச் சேர்ந்த கெக்கிராவ முஸ்லிம் வித்தியாலய மாணவன் மொஹமட் நளீம் ஸகீ அஹமட் 195 புள்ளிகளைப் பெற்று முதலிடம் பெற்றுள்ளார்.

அகில இலங்கை ரீதியில் மூவர் 195 புள்ளிகளைப் பெற்று முதலிடம் பெற்றுள்ளனர். அதில் ஸகி அஹமட் தமிழ் மொழிமூலம் தோற்றியமை குறிப்பிடத்தக்கது.

மற்றைய இருவரும் சிங்கள மொழி மூலம் தோற்றியவர்களாகும். களுத்துறை மகளிர் கல்லூரி மாணவியான ஒசாதி ரஷி பிரபா பொன்சேகாவும் மற்றவர் களுத்துறை தொடங்கொட, மிரிஸ்வெல மகா வித்தியாலயத்தைச் சேர்ந்த கே.டி.வி.நெத்மி ரணவீர ஆகியோராவர்.

இதற்கு அடுத்தபடியாக 194 புள்ளிகளை இருவர் பெற்றுள்ளனர். ஒருவர் விஸ்வமடு மேற்கு நெத்தலியாரு வித்தியாலயத்தைச் சேர்ந்த பரமேஸ்வரன் சேதுராமன் என்பவரும் பிபிலை,மெதகமவைச் சேர்ந்த இசான் லசிந்தசத்சர என்பவருமாவர்
நன்றி .வீரகேசரி இணையம் 9/15/2011 5:37:48 PM

No comments:

Post a Comment