தங்களின் வருகைக்கு நன்றி

date

relojes web website clocks

21 May 2017

எல்பிட்டிய வர்த்தக நிலையம் தீ வைப்பு


காலி மாவட்டம் எல்பிடிய பிரதேசத்தில் உள்ள முஸ்லிம் வர்த்தகருக்கு சொந்தமான வர்த்தக நிலையம் மீது தீ மூட்டப்பட்டுள்ளது.


லவர்ஸ் பக் என்ற குறித்த வர்த்த நிலையத்தின்  உரிமையாளரின் நெருங்கிய உறவினர் இது தொடர்பில் மடவளை நியுஸுக்கு கருத்து வெளியிடுகையில்

இன்று நள்ளிரவு வேளை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் வர்த்தஙக
நிலையத்தின் ஒருபகுதி தீக்கிறையாகியுள்ளதாகவும் உரிமையாளர் பேருவளை பிரதேசத்தை சேர்ந்தவர் இர்ஷாத் எனவும் அவர் குறிப்பிட்டார்.

நண்பர்களுடன் பகிரவும்:

source:madawala news

06 May 2017

சமூக வலைகளில் தீயாக பரவும் HIV வைரஸ் ஊசி விவகாரம்.. சுகாதார சேவை பணிப்பாளரின் விளக்கம் இதோ.



வீடுகளுக்கு வந்து இலவசமாக இரத்த மாதிரி பரிசோதனை செய்வதாக கூறி எச்.ஐ.வி வைரஸ்ஸை ஊசி மூலம் உட்செலுத்துவதாக தற்போது சமூகவலைத்தளங்களில் செய்தியொன்று அதிகளவில் பகிரப்பட்டு வருகின்றது.
வீடுகளுக்கு வந்து இலவசமாக இரத்த மாதிரி பரிசோதனை செய்வதாக கூறி எச்.ஐ.வி வைரஸ்ஸை ஊசி மூலம் உட்செலுத்துவதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது ஐ.எஸ் தீவிரவாதிகளின் திட்டம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழ் சிங்களம் மற்றும் ஆங்கில மொழிகள் ஊடாக சமூகவலைத்தளங்களில் இந்த செய்தி தற்போது உலாவருகின்றது.
இதன் உண்மை விபரம் தொடர்பில் சுகாதார சேவை பணிப்பாளர் நாயகம் இவ்வாறு கருத்து தெரிவித்தார்,
"நாட்டின் பல மாவட்டங்களில் இரவு வேளையில் பொது சுகாதார பரிசோதகர்கள், அவர்களது சீருடையில் உத்தியோகபூர்வ அடையாள அட்டையுடன் வீடுகளுக்கு வருவார்கள் யானைக் கால் நோய் தொடர்பில் இரத்த மாதிரிகளை சேகரிப்பதற்கான உரிய பிரதேங்களுக்கு.
இது இலங்கையில் சுகாதார சேவையில் ஏற்றுக்கொள்ளப்பட்ட தேசிய திட்டத்தின் ஒரு பகுதியாகும்.
எனவே போலியான எச்சரிக்கையை விடுத்து மக்களை அச்சுறுத்துவதற்காக முன்னெடுக்கப்படும் ஒரு முயற்சி இது என்பதால் யாரும் ஏமாற்றம் அடைய வேண்டாம்.
இது போன்ற சந்தர்ப்பங்களில் எவருக்காது சந்தேகம் ஏற்படுமாயின் அவர்களின் உத்தியோகபூர்வ அடையாள அட்டையை கோரமுடியும்.
எனவே இது போன்ற பொய்யான தகவல்களால் ஏமாற வேண்டாம்" என அவர் தெரிவித்துள்ளார்.
அதேவேளை சம்பவம் தொடர்பில்   இதுவரை எவ்வித முறைப்பாடுகளும் கிடைக்கப்பெறவில்லை என காவற்துறை ஊடகப் பேச்சாளரும்  தெரிவித்துள்ளார்.
பொது சுகாதார பரிசோதகர்கள் தவிர்ந்த வேறு யாராவது இது போன்று வீடுகளுக்கு வந்தால் அருகில் உள்ள காவற்துறைக்கோ, அல்லது 119 என்ற அவசர தொலைபேசி இலக்கத்திற்கோ அழைத்து அறிவிக்குமாறு அவர் மேலும் கோரியுள்ளார்.



நண்பர்களுடன் பகிரவும்:





Source:Madawala news

03 May 2017

மியன்மார் அகதிகளை மனிதாபிமானத்துடன் பார்த்த மல்லாகம் நீதிவான் கருணாகரன்


புகலிடம் கோரி இலங்கை கடற்பரப்பில் தத்தளித்துகொண்டிருந்த நிலையில் இலங்கை கடற்படையினரால் காப்பாற்றப்பட்ட 30 மியன்மார் நாட்டை
சேர்ந்த அகதிகள் அனைவரையும் யாழ்ப்பாணம் சட்ட வைத்திய அதிகாரி முன்னிலையில் முற்படுத்தி பரிசோதனைகளை மேற்கொண்ட பின்னர் உடனடியாக அவர்களது உணவு காலாச்சாரமானது வேறுபட்டதாக உள்ளமையால் அவர்களுக்கு தரமான உலர் உணவுகளை வழங்க மல்லாகம் நீதிவான் உத்தரவிட்டிருந்தார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை காங்கேசன்துறை கடற்பரப்பில் தத்தளித்துக்கொண்டிருந்த மியன்மார் நாட்டை சேர்ந்த 30பேரை இந்திய மீனவர்கள் இருவர் காப்பாற்ற முயன்றிருந்தனர். இதன்போது அங்கு சென்ற காங்கேசன்துறை கடற்படை முகாமை சேர்ந்த கடற்படையினர் அவர்கள் அனைவரையும் பாதுகாப்பாக மீட்டு காங்கேசன்துறை பொலிஸாரிடம் ஒப்படைத்திருந்தனர். இதில் 6 குடும்பங்களை சேர்ந்த 16 சிறுவர்களும் 7ஆண்களும் 7பெண்களும் காணப்பட்டதுடன் இவர்களில் ஒருவர் திருமணமாகாத பெண்ணாகவும் மற்றுமொருவர் கர்ப்பிணி பெண்ணாகவும் காணப்பட்டிருந்தனர்.
இந்நிலையில் நேற்றைய தினம் (2-5-2017) வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த இவர்களை மீண்டும் நேற்று(2-5-2017) மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் சிறைச்சாலை அதிகாரிகள் முற்படுத்தியிருந்தனர். இதன்போது காங்கேசன்துறை பொலிஸார் இவர்கள் மீது குடிவரவு குடியகல்வு சட்டத்தின் 45 சி பிரிவின் கீழ் பி அறிக்கையொன்றையும் மன்றில் சமர்பித்திருந்தனர்.
இந்நிலையில் மியன்மார் அகதிகள் அனைவரையும் நுகேகொட மிரிஹானை தடுப்பு முகாமில் வைக்குமாறும் அத்துடன் எனைய இரு இந்தியர்களையும் சட்டமா அதிபரின் உத்தரவு கிடைக்கும் வரை தடுத்து வைக்கவும் மல்லாகம் நீதவான் நீதிமன்ற நீதிவான் கருணாகரன் உத்தரவிட்டிருந்தார்.
 இதேவேளை ஆசிய பசுப்பிக் பிராந்திய அகதிகள் குழுமத்தினர் சிவில் அமைப்புக்கள் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் சட்டப்பிரிவு ஆகியோர் விடுத்த கோரிக்கைகளுக்கு அமைய இவ் மியன்மார் முஸ்லீம் அகதிகள் சார்பில் சட்டத்தரணி ருஸ்தி ஹபீப் மன்றில் முன்னிலையாகியிருந்தார்.
மன்றில் முன்னிலையான சட்டத்தரணி இலங்கையானது அகதிகள் அந்தஸ்த்து உடன்படிக்கையில் கைச்சாத்திடாத போதும் 2005ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட ஜக்கிய நாடுகள் அகதிகள் அமைப்பு உடன்படிக்கையின் பிரகாரம் புகலிடம் வழங்க கூடிய நாட்டுக்கு அனுப்பி வைக்கும் வரை இவர்களை மிரிஹானை தடுப்பு முகாமிற்கு அனுப்ப வேண்டும் என கோரியிருந்தார். அத்துடன் இவ் வழக்கு நடவடிக்கையும் மிரிஹானை பகுதிக்கு அண்மையான நீதிமன்றுக்கு மாற்ற வேண்டும் எனவும் அவர் மன்றை கோரியிருந்தார்.
இவ்வாறு செய்வதனூடாக இவர்களுக்கு சர்வதேச ரீதியான அகதிகள் அந்தஸ்த்தும்இ பாதுகாப்பும் கிடைக்கும் எனவும்இ ஜக்கிய நாடுகள் அகதிகள் அமைப்பினூடாக அகதி அந்தஸ்த்து வழங்க கூடிய வேறொரு நாட்டிற்கு அனுப்ப முடியும் எனவும் அவர் மன்றில் குறிப்பிட்டிருந்தார்.
இதனை தொடர்ந்து குறித்த மியன்மார் தேசத்தவர்களை மனிதாபிமானத்துடன் பார்த்த நீதிவான் அவர்கள் அனைவரையும் யாழ்ப்பாணம் சட்ட வைத்திய அதிகாரி முன்னிலையில் முற்படுத்தி பரிசோதனைகளை மெற்கொண்ட பின்னர் உடனடியாக மிரிஹானை தடுப்பு முகாமிற்கு மாற்றுமாறு உத்தரவிட்டார். அத்துடன் அவர்களது உணவு காலாச்சாரமானது எம்மில் இருந்து வேறுபட்டதாக உள்ளமையால் அவர்களுக்கு தரமான உலர் உணவுகளை வழங்கவும் உத்தரவிட்டிருந்தார். அத்துடன் அவர்களை காப்பாற்றிய இரண்டு இந்திய மீனவர்களையும் விடுதலை செய்வதற்கான சட்டமா அதிபர் திணைக்கள உத்தரவு கிடைக்கப்படும் வரை தடுத்து வைக்கவும் நீதிவான் கருணாகரன் உத்தரவிட்டிருந்தார்.
மேலும் வழக்கு நடவடிக்கையானது மிரிஹானை பகுதிக்கு அண்மையான நீதிமன்றுக்கு மாற்றுவது தொடர்பில் சட்டமா அதிபர் திணைக்களமே முடிவெடுக்க வேண்டும் எனவும் நீதிவான் குறிப்பிட்டிருந்தார்.
இதேவேளை குறித்த 30 மியன்மார் நாட்டை சேர்ந்த முஸ்லிம் மக்களும் கடந்த 2012ஆம் ஆண்டு அங்கு காணப்பட்ட இன ஒடுக்கு முறை காரணமாக புகலிடம் கோரி இந்தியாவிற்கு சென்றிருந்தனர். இதன்போது இந்தியாவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இவர்கள் அங்கு வழக்கு இடம்பெற்று அங்கிருந்து வெளியேற்றப்பட்டிருந்தனர். இவ்வாறு வெளியேற்றப்பட்ட மக்கள் புகலிடம் கோரிரே இலங்கை கடல் எல்லைக்குள் நூழைந்தே விபத்தில் சிக்கிய நிலையில் கடற்படையினரால் மீட்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்க்கதாகும்.

Source:madawala news

26 April 2017

Indonesian Qur’an reciter dies live on-air


Indonesian reciter Sheikh Ja’afar Abdulrahman died while reciting verses of the Qur’an during a live broadcast Tuesday during a national ceremony in the presence of the Indonesian Social Affairs Minister.
The four-minute video clip that caught the moment of the Sheikh’s death has been widely circulated on social media.
The late reciter appeared to have been struck by a sudden collapse while reading verses from the Al-Mulk chapter, where he kept on reciting until he was rescued by a medical team and removed on a stretcher.
A number of social media users who circulated the footage praised the reciter’s death saying “what an honorable way to die” and wishing the same fate for them and their loved ones.



27 March 2017

இரவில் அடிக்கடி சிறுநீர் கழிப்பவரா நீங்கள்? சிக்கல்களை வெளிப்படுத்துகிறது ஆய்வு


இரவில் சிறுநீர் கழிக்க தூக்கத்திலிருந்து எழுபவர்கள் தங்கள் உணவில் எடுத்துக் கொள்ளும் உப்பின் அளவைக் குறைத்து கொள்ள வேண்டும் என ஜப்பான் மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.

இரவில் அதிகப்படியான சிறுநீர் கழிக்கும் நிலையான நாக்டுரியா, குறிப்பாக 60 வயதை தாண்டியவர்களுக்கு வருகிறது; அதனால் இரவில் தூக்கம் தடைபடுவதால் அது வாழ்க்கை நடைமுறையை பாதிக்கிறது.
300 தன்னார்வலர்களிடம் மேற்கொண்ட ஆய்வில், உப்பின் அளவை குறைவாக எடுத்துக் கொள்வதனால் குறைந்த அளவில் சிறுநீர் கழிக்க வழிவகுக்கிறது என ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
சமச்சீர் உணவு, இந்த பிரச்சனையை சரி செய்ய உதவும் என பிரிட்டன் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

லண்டனில் நடைபெற்ற ஐரோப்பிய சிறுநீரகவியல் கூட்டமைப்பு கூட்டத்தில், நாகசாகி பல்கலைக் கழகத்தின் ஆய்வாளர்கள் தங்கள் ஆய்வுகளை சமர்பித்தனர்.
மூன்று மாதங்களாக அதிக உப்பை எடுத்துக் கொள்ளும் நோயாளிகள் மற்றும் உறக்க கோளாறு இருக்கும் நோயாளிகளிடம் அவர்களின் உப்பின் அளவை குறைத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தி பின் அவர்களை கண்கானித்தனர்
அதன்பிறகு சராசரியாக, இரண்டு முறை சிறுநீர் கழிப்பது, ஒரு முறையாக குறைந்தது.
இந்த மாற்றம், பகல் மற்றும் இரவு ஆகிய இரண்டு வேளைகளிலும் ஏற்பட்டது. மேலும் அவர்கள் வாழ்க்கை தரமும் உயர்ந்தது.
சிறுநீர் கழிக்கச் செய்யும் உணர்வு
***********************************

மாறாக, 98 பேர், வழக்கத்தை காட்டிலும் அதிகப்படியான உப்பை உட்கொண்டார்கள். எனவே இரவு நேரத்தில் அவர்கள் அடிக்கடி சிறுநீர் கழிக்க நேர்ந்தது
அதிக அளவில் உப்பு எடுத்துக் கொள்ளுதல் மற்றும் சிறுநீர் கழித்தல் ஆகிய இரண்டிற்கும் உள்ள தொடர்பை உறுதி செய்ய மேலும் ஆய்வுகள் தேவை ஆனால் இந்த விளைவு முதியவர்களுக்கு உதவும் என இந்த அய்வை மேற்கொள்ளும் பேராசிரியர் மாட்சூ டாமஹீரோ தெரிவித்தார்.
"எளிய உணவுமுறை மாற்றத்தின் மூலம் குறிப்பிடத்தக்க அளவில் வாழ்க்கை தரத்தை மாற்ற இயலும் என்பதை இந்த ஆய்வு சாத்தியமாக்கியுள்ளது" என அவர் தெரிவித்துள்ளார்.
பிரிஸ்டல் பல்கலைக்கழகத்தின் நாக்டுரிய நிபுணர் பேராசிரியர் மார்கஸ் டிரேக், பொதுவாக அடிக்கடி சிறுநீர் கழிக்கும் பழக்கத்திற்கு மக்கள் உட்கொள்ளும் உப்பின் அளவு காரணமல்ல என்று தெரிவித்துள்ளார்.

பொதுவாக படுக்கைக்குச் செல்லும் முன் எடுத்துக் கொள்ளும் குடிநீரின் அளவு, சிறுநீர்ப்பை மற்றும் ஆண்களில் பிராஸ்டேட் சுரப்பிகளின் பிரச்சனைகள் ஆகியவற்றில் மருத்துவர்கள் கவனம் செலுத்துவர் என்று அவர் தெரிவித்துள்ளார்.
"இந்த பிரச்சனைக்கான அனைத்து காரணத்தையும் சரி செய்வது எப்படி என்ற பயனுள்ள ஆய்வு நம்மிடம் உள்ளது" என்று அவர் தெரிவித்துள்ளார்.
இரவில் சிறுநீர் கழிக்க எழும்பும் பிரச்சனை பாதியளவிலான 50வயதுக்கு மேற்பட்ட ஆண் மற்றும் பெண்களை பாதிக்கின்றது.
இது வயது முதியவர்களிடம் அதிகமாக காணப்படுகிறது; அவர்கள் குறைந்தது இரண்டு முறையாவது இரவில் தூக்கித்திலிருந்து எழும்புகிறார்கள்.
இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட முறை சிறுநீர் கழிக்கச் செல்லும் போது தூக்கம் கலைகிறது அதனால் மன அழுத்தம், உடல் சோர்வு மற்றும் சகிப்புத்தன்மையற்ற நிலை ஏற்படுகிறது.
வயதாவதால் ஏற்படும் பக்க விளைவா?
*******************************************
வயதாகும் போது ஏற்படும் ஹார்மோன் மாற்றங்களாலும் இரவில் அதிக முறை சிறுநீர் கழிக்கும் நிலை ஏற்படுகிறது.
வயது அதிகமாக ஆண்களின் பிராஸ்டேட் சுரப்பிகளும் அளவில் பெரிதாகின்றன.
அதிக அளவு உடைய பிராஸ்டேட் சுரப்பி, உடலை விட்டு வெளியேறும் போது சிறுநீர் கடந்து செல்லும் குழாயை உரசுவதால் அது சிறுநீர் கழிக்கும் உணர்வை தூண்டுகிறது.
ஆனால் இது முழுமையான காரணம் அல்ல.
பிற உடல்நல பிரச்சனைகளான நீரிழிவு, இதய கோளாறுகள் அல்லது உறங்கும் போது மூச்சுத்திணறல் என்பது போன்ற உறக்கம் தொடர்பான கோளாறுகள் ஆகியவை நாக்டுரியாவின் காரணமாக இருக்கலாம்.

எந்த அளவு உப்பை எடுத்துக் கொள்ளலாம்?
************************************************

பிரிட்டனில் உள்ள 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் நாள் ஒன்றிற்கு 6 கிராம் உப்பிற்கு (2.4கிராம் அளவு சோடியம்) மேல் எடுத்துக் கொள்ள கூடாது என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது
1-3வயதிற்குட்பட்ட குழந்தைகள் 2 கிராமிற்கும் குறைவான உப்பை எடுத்துக் கொள்ள வேண்டும்; 7-10 வயது குழந்தைகள் 5 கிராம் உப்பு வரை எடுத்துக் கொள்ளலாம்
11 வயதிற்கு மேற்பட்ட குழந்தைகள் 6 கிராம் உப்பு வரை எடுத்துக் கொள்ளலாம்.
எந்தெந்த உணவில் உப்பின் அளவு அதிக காணப்படுகிறது?
ரொட்டி மற்றும் காலை உணவு தானியங்களில் நாம் நினைக்கும் அளவைக் காட்டிலும் உப்பின் அளவு அதிகமாக இருக்கும்.
உணவுப் பொருட்களை வாங்கும் போது 100கிராம் உணவில் எத்தனை அளவு உப்பு கலந்துள்ளது என்பதை கவனிக்க வேண்டும்.
100கிராம் உணவில் 1.5 கிராம் அளவில் உப்பு இருந்தால் அது அதிக அளவாக கருதப்படுகிறது; இது, உணவு பாக்கெட்டுகளில் சிவப்பு நிற கோடிட்டு இருக்கும்.