தங்களின் வருகைக்கு நன்றி

date

relojes web 12 Apr 2025

22 January 2013

இணையம் ஊடான நிதி மோசடிகள் தொடர்பில் அவதானம் தேவை!

இணையத்தினூடாக மேற்கொள்ளப்பட்டு வரும்
பிரமிட் முறையிலான சட்டவிரோத
நிதி மோசடிகள் தொடர்பில் மக்கள் அவதானமாக
இருக்கும்படி இலங்கை கணனி பயன்பாட்டாளர்களி
ன் அவசர உதவி மற்றும் பொறுப்புகளுக்கான
குழு எச்சரிக்கை விடுத்துள்ளது. இத்தகைய மோசடிகளில் பணத்தைப் பறிகொடுத்த
பலர் தம்மிடம்
முறைப்பாடுகளை மேற்கொண்டுள்ளதாக
அக்குழுவின் பாதுகாப்பு பொறியியலாளர்
ரொஷான் சந்ரகுப்த தெரிவித்துள்ளார். பிரமிட் முறையிலான நிதிச்
சேகரிப்பு திட்டங்களை மத்திய
வங்கி தடைசெய்துள்ள போதிலும் சில குழுக்கள்
இணையம் ஊடாக இதனை மேற்கொண்டு வருவதாக
ரொஷான் சந்ரகுப்த குறிப்பிட்டுள்ளார். இலங்கையில் இம் மோசடியில்
ஈடுபட்டுவருவோர் தொடர்பில் இரகசிய
பொலிஸார்
விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக அவர்
மேலும் தெரிவித்துள்ளார்.

Thanks:virakesari.lk

No comments:

Post a Comment