தங்களின் வருகைக்கு நன்றி

date

relojes web website clocks

21 January 2020

வானொலி புகழ் அறிவிப்பாளர் ஏ.ஆர்.எம்.ஜிப்ரி காலமானார்



வானொலி புகழ் அறிவிப்பாளரும் ஓய்வுபெற்ற அதிபருமான ஏ.ஆர்.எம்.ஜிப்ரி நேற்று (20) திங்கட்கிழமை இரவு 11.30ற்கு கொழும்பு தேசிய வைத்தியசாலையில் காலமானார்.
கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவு காரணமாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் காலமாகியுள்ளார்.
அன்னாரின் ஜனாஸா இன்று (21) அதிகாலை 2.30 மணியளவில் தேசிய வைத்தியசாலையிலிருந்து பாணந்துறை, கொஸல்வத்தையில் உள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ளது.
இன்று செவ்வாய்க்கிழமை காலை 8.00 மணியளவில் பாணந்துறையிலிருந்து கல்முனைக்கு கொண்டு செல்லப்படும் என அவரது மகனான MJM மின்ஹாஜ் தெரிவித்தார்.
இளம் ஊடகவியலாளர்கள் பலரை உருவாக்கிய ஏ.ஆர்.எம். ஜிப்ரியின் மறைவு சமூகத்திற்கும் ஊடகத்துறைக்கும் பேரிழப்பாகும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவரும் சிரேஷ்ட ஊடகவியலாளருமான என் எம் அமீன் விடுத்துள்ள அனுதாபச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
இவர் வானொலி மற்றும் தொலைக்காட்சி அறிவிப்பளாராக திகழ்ந்ததோடு ஆசிரியராக, அதிபராக என்று கல்வித்துறையிலும் சேவையாற்றியுள்ளார். பாணந்துறை ஜீலான் மத்திய மஹா வித்தியாலயத்தின் ஓய்வுபெற்ற அதிபருமாவார்.
சிரேஷ்ட ஒலிபரப்பாளருமான அல் ஹாஜ் ஏ.ஆர்.எம்.ஜிப்ரி அவர்களது ஜனாஸா சாய்ந்தமருது உஸ்மான் வீதியில் அமைந்துள்ள இல்லத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு பின்னர் அங்கிருந்து அக்பர் பள்ளிவாசல் மையவாடியில் இன்று பிற்பகல் (மஃரிப் தொழுகையின் பின்னர்) நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.

Source:Thinakaran

29 December 2019

உங்களைப் பற்றி கூகுள் தெரிந்து வைத்திருப்பதை அழிப்பது எப்படி?




நீங்கள் எவற்றைத் தேடுகிறீர்கள், எதை விரும்புகிறீர்கள், நீங்கள் பார்க்கும் தளம் போன்றவை இதற்குத் தெரியும்.
உலகின் மிகவும் பிரபலமான தேடல் தளமாக கூகுளை பற்றிதான் நாங்கள் பேசுகிறோம்.

''நீங்கள் கூகுள் சேவைகளைப் பயன்படுத்தும்போது, உங்கள் தரவுகளை நம்பி அளிக்கிறீர்கள்''
தமது பயனர்களுக்கான அந்தரங்க உரிமை விதிமுறைகள் மற்றும் நிபந்தனையின் முதல் வரியில் கூகுள் தெளிவாகக் கூறியுள்ளது.
ஆனால், ''மை ஆக்டிவிட்டி (My activity)'' செயல்பாட்டில் சேகரித்து வைக்கப்பட்டுள்ள தகவல்களை அகற்றுவதற்கான சாத்தியத்தை கூகுள் வழங்குகிறது என்பது உங்களுக்குத் தெரியாமல் இருக்கும்.
எளிமையான வழிமுறைகளில் எப்படி இதைச் செய்வது என்பதை விளக்குகிறோம்.

15 December 2019

காய்ச்சலுக்கு அன்டிபயாடிக் ஒரு மருந்தாகுமா?


J





“டாக்டர் எனது மகனுக்கு இரண்டு நாட்களாக சரியான காய்ச்சல். பனடோல் கொடுத்தும் குறையவில்லை. என்ன அன்டிபயாட்டிக் கொடுக்கலாம்?” இது பொதுவாக பெற்றோர்களினால் என்னிடம் கேட்கப்படும் ஒரு கேள்வி.
இன்று அபரிமிதமான அன்டிபயாடிக் பாவனையால் எமது எதிர்காலம் கேள்விக்குறியாகி கொண்டிருக்கின்ற
து. எனவே அதைப் பற்றி சிறிது விளக்கமாக பார்ப்போம்.
காய்ச்சல் என்பது பொதுவாக குழந்தைகளுக்கு ஏற்படும் ஒரு நிலையாகும். அதிலும் தற்போதைய காலத்தில் காய்ச்சல் ஏற்படாத குழந்தையே வீட்டில் இல்லை என்ற அளவுக்கு காய்ச்சல் ஏற்படுகின்றது. காய்ச்சல் ஒரு நோயின் அறிகுறியே தவிர காய்ச்சல் என்பது மட்டும் ஒரு நோய் அல்ல.
ஒருவரின் உடல் வெப்பநிலை 38°C க்கு மேலும் அதிகரிக்கும் பொழுது அதை நாம் காய்ச்சல் என்று குறிப்பிடுகின்றோம் .

02 December 2019

புதிய ரக ஆப்பிள் அறிமுகம்: ஓராண்டுக்கு கெடாமல் இருக்கும்


குளிர்சாதனப் பெட்டியில் வைத்தால் சுமார் ஓராண்டுக்கு கெடாமல் இருக்கும் என்று கூறப்படும் ஒரு புதிய வகை ஆப்பிள் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் அமெரிக்காவில் விற்பனைக்கு வந்துள்ளது.
இந்த வகை ஆப்பிளை கண்டறிவதற்கு ஆராய்ச்சியாளர்களுக்கு இரு தசாப்தங்கள் ஆனதாக கூறப்படுகிறது.
'காஸ்மிக் கிரிஸ்ப்' என்று அழைக்கப்படும் இந்த புதிய வகை ஆப்பிளானது 'ஹனிகிரிஸ்ப்', 'எண்டர்ப்ரைஸ்' ஆகியவற்றின் கலப்பினமாகும். இது முதன் முதலில், 1997ஆம் ஆண்டு வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில் பயிரிடப்பட்டது.
'திடமான, மிருதுவான, சாறு நிறைந்த இந்த ஆப்பிளை' கண்டறிந்து வணிகரீதியாக வெளியிடுவதற்கு 10 மில்லியன் டாலர்கள் (சுமார் 72 கோடி ரூபாய்) செலவிடப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் வாஷிங்டன் மாகாணத்தில் இருக்கும் விவசாயிகள் அடுத்த பத்தாண்டுகளுக்கு இந்த ஆப்பிளை விளைவிப்பதற்கு பிரத்யேக அனுமதி வழங்கப்பட்டுள்ளது.