தங்களின் வருகைக்கு நன்றி

date

relojes web website clocks

30 December 2018

A/L பரீட்சையில் தேசிய ரீதியில் முதலிடம் பிடித்த மாணவர்கள்


2018 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர உயர் தர பரீட்சைக்கான பெறுபேறுகள் நேற்று (29) வெளியாகின. அதற்கமைய தேசிய ரீதியாக முதலிடம் பிடித்த மாணவர்களின் விபரங்கள் தற்போது வௌியிடப்பட்டுள்ளன.
இதனடிப்படையில் முதலாம், இரண்டாம், மூன்றாம் இடத்தை பிடித்த மாணவர்களின் விபரங்களை பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டுள்ளது.
உயிரியல் விஞ்ஞான பிரிவு
முதலாம் இடம் - கலனி ராஜபக்ஷ - கம்பஹா ரத்னவெலி மகளிர் பாடசாலை இரண்டாம் இடம் - ரவிந்து ஷஷிக - கொழும்பு டீ.எஸ். சேனாநாயக்க கல்லூரி மூன்றாம் இடம் - ஹக்கீம் கரீம் - மாத்தளை சாஹிரா கல்லூரி
பௌதிக விஞ்ஞான பிரிவு
முதலாம் இடம் - சத்துனி விஜேகுனவர்தன - கொழும்பு விசாகா மகளிர் வித்தியாலயம் இரண்டாம் இடம் - சமிந்து லியனகே - காலி ரிச்சட் கல்லூரி மூன்றாம் இடம் - தெவிந்து விஜேசேகர - கொழும்பு ரோயல் கல்லூரி
வர்த்தக பிரிவு
முதலாம் இடம் - கசுன் விக்ரமரத்ன - குருணாகல் மலியதேவ வித்தியாலயம் இரண்டாம் இடம் - உச்சினி ரணவீர - கம்பஹா ரத்னாவலி மகளிர் பாடசாலை மூன்றாம் இடம் - மலிதி ஜயரத்ன - கொழும்பு மியுசியஸ் கல்லூரி
கலை பிரிவு
முதலாம் இடம் - சேனதி அல்விஸ் - பாணந்துறை லைஸியம் சர்வதேச பாடசாலை இரண்டாம் இடம் - சித்துமினி எதிரிசிங்க - குருணாகல் மலியதேவ வித்தியாலயம் மூன்றாம் இடம் - இஷானி உமேஷா பிட்டிகல - கண்டி மஹாமாயா மகளிர் பாடசாலை
பொறியியல் தொழில்நுட்பலியல் பிரிவு
முதலாம் இடம் - யசாஸ் பத்திரன - கொழும்பு ஆனந்தா கல்லூரி இரண்டாம் இடம் - தரிந்து ஹேஷான் - கொழும்பு ஆனந்தா கல்லூரி மூன்றாம் இடம் - சேஷான் ரங்கன - நிக்கவரெட்டிய மஹாசேன் கல்லூரி
தொழில்நுட்பவியல் பிரிவு
முதலாம் இடம் - சந்துனி கொடிப்பிலி - கம்புருப்பிட்டிய நாரன்தெனிய மத்திய மகா வித்தியாலயம் இரண்டாம் இடம் - ரிஸா மொஹமட் - சம்மாந்துறை முஸ்லிம் மகா வித்தியாலயம் மூன்றாம் இடம் - விசிந்து லக்மால் - ஹோமாகம மஹிந்த ராஜபக்ஷ வித்தியாலயம்.





Source:ada derana

22 November 2018

நாவுக்கு இலகுவானதும் மீசானுக்கு பாரமானதும் இறைவனுக்கு விருப்பமானதுமான ஒரு திக்ர்


ஊட்டச்சத்து குறைபாடு: ஏமனில் மூன்று வருடங்களில் 85,000 குழந்தைகள் பலி





ஏமனில் கடந்த மூன்றாண்டுகளாக நடந்து வரும் போரின்போது மட்டும், கடுமையான ஊட்டச்சத்து குறைபாட்டின் காரணமாக ஐந்து வயதிற்குட்பட்ட சுமார் 85,000 குழந்தைகள் உயிரிழந்திருக்கலாம் என்று மதிப்பீடுகள் தெரிவிப்பதாக முன்னணி தொண்டு நிறுவனமொன்று தெரிவித்துள்ளது.

ஏமனில் உயிரிழந்துள்ள குழந்தைகளின் எண்ணிக்கை, பிரிட்டனின் இரண்டாவது மிகப் பெரிய நகரமான பர்மிங்ஹாமிலுள்ள ஒட்டுமொத்த ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கைக்கு சமம் என்று 'சேவ் தி சில்ரன்' என்ற அமைப்பு தெரிவித்துள்ளது.
ஏமனில் அதிகபட்சம் 14 மில்லியன் மக்கள் பஞ்சத்தின் பிடியில் சிக்கியுள்ளதாக கடந்த மாதம் ஐக்கிய நாடுகள் சபை எச்சரித்திருந்தது.
உலகிலேயே மோசமான மனிதாபினாம நெருக்கடியாக கருதப்படும் மூன்றாண்டுகளாக நடந்து வரும் ஏமன் உள்நாட்டுப் போரை முடிவுக்கு கொண்டுவருவதற்கு ஐநா சபை முயற்சித்து வருகிறது.

19 November 2018

400 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கிறதா மஹாமேரு புஷ்பம்?- சமூக வலைதளங்களில் படங்களுடன் வைரலாகும் வதந்தி


சதுரகிரி மலையில் மஹாமேரு புஷ்பம் என்ற ஒருவகை பூக்கள் 400 ஆண்டுகளுக்குப் பிறகு பூத்துள்ளதாக சமூக வலைதளங்களில் வைரலாக பகிரப்படும் புகைப்படங்கள் போலியானவை என்று தாவரவியல் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.