இதற்கு பின்னால் மிக அழகான ஆண்டுதோறும் நடை பெறும் ஒரு மரபு உள்ளது, இது "யௌமுல் குலீஃ" (Yawm Al-Kholeef) எனப்படுகிறது. இது அரபிச் சொல்லான "குலீஃ" என்றால் "வெற்றிடமான" அல்லது "காலியான" என்பதிலிருந்து வந்தது. துல் ஹிஜ்ஜாவின் 9ஆம் நாளில் லட்சக்கணக்கான ஹஜ் யாத்திரிகர்கள் மற்றும் மக்கா நகரத்து ஆண்கள் அரஃபாத் மலைக்குச் செல்லும் போது, மக்கா நகரத்தின் பெண்கள் மற்றும் குழந்தைகள் மஸ்ஜித் அல் ஹராமுக்கு வந்து கஅபாவை தவாஃப் செய்கிறார்கள். இதனால் புனித ஹராம் வெறுமையாக இருக்காது.
இந்த மரபு மாதாஃ பகுதியை அந்த நாளில் "கருப்பாக" காட்டச் செய்கிறது, ஏனெனில் பெரும்பாலான ஆண்கள் ஹரமில் இல்லாத நேரத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகள் இவ்விடத்தை நிரப்பி புனித ஹராம் வெறுமையாகி விடாமல் புனித கஃபாவை தவாஃப் செய்கிறார்கள்.